Monday, March 2, 2026
No menu items!

வழிமாறும் யாழ்ப்பாணத்தார் பணம்!

யாழ்ப்பாணத்தில் திறக்கப்பட்ட கீல்ஸ் சுப்பர் மார்க்கெட், தனது முதல் நாளிலேயே 19 மில்லியன் ரூபா வர்த்தகத்தை பதிவு செய்துள்ளது. இதற்கு முன்னர், கார்கீல்ஸ் சுப்பர் மார்க்கெட்டும் இதேபோன்ற வர்த்தக சாதனையை ஏற்படுத்தியது.

மல்டிநேஷனல் நிறுவனங்கள், உணவகங்கள் உள்ளிட்ட பல புதிய வர்த்தகங்கள் வடக்கில் பெருகி வருகின்றன. குறிப்பாக, சென்னை பிரியாணி கடைகள் எங்கும் வளர்ந்து வருவதைக் காணலாம். இந்த முதலீடுகள் வடக்கில் அதிகரிப்பதை நாம் எதிர்ப்பதில்லை. ஆனால், இவற்றால் வடக்கில் உருவாகும் பணப்புழக்கம் அப்பகுதிக்கு உரியவர்களுக்கு இல்லாமல் வெளியே செல்கிறது என்பது கவலைக்குரிய விஷயமாகும்.

போர் முடிந்து ஒன்றரை தசாப்தங்கள் கடந்தும், புலம்பெயர் நாடுகளில் வசிக்கும் நிதி வளமிக்க தமிழ் தொழிலதிபர்கள் வடக்கில் பாரிய முதலீடுகளை செய்யாமல் இருப்பது கவலைத்தக்க நிலை. இதன் விளைவாக, ஒரு இனத்தின் பொருளாதார வீழ்ச்சி தொடர்கிறது.

எல்லா வழிகளிலும் இழப்பை சந்தித்த ஒரு சமூகத்திற்கு பொருளாதார வளர்ச்சி அவசியம். ஆனால், இதற்கான முயற்சிகள் புலம்பெயர் தமிழ் வர்த்தகர்களால் மேற்கொள்ளப்படவில்லை. வடக்கில் பெரிய வர்த்தக முதலீடுகளை மேற்கொண்டு, அதிலிருந்து உருவாகும் வருமானத்தை மீண்டும் அதே பகுதியின் வளர்ச்சிக்கு திருப்புவது மட்டுமே ஒரு வலுவான பொருளாதாரத்தை உருவாக்க முடியும்.

மேலும், மேலைநாட்டு உணவகங்கள் மற்றும் தமிழ்நாடு பிரியாணி கடைகள் வடக்கில் பெருகுவது, எமது பாரம்பரிய உணவுகளை மறந்து செல்லும் ஆபத்தை உருவாக்குகிறது. தமிழர்கள் உலகத்திற்கு பலவிதமான, ஆரோக்கியமான உணவுகளை வழங்கிய மக்கள். குறிப்பாக, யாழ்ப்பாண உணவுகளுக்கு சர்வதேச அளவில் மதிப்பும் ஈர்ப்பும் உள்ளது. ஆனால், இன்று வடக்கில் உணவகங்கள் திறக்கப்பட்டாலும், பாரிய முதலீடுகள் இல்லை. இதனால், அந்த இடத்தை மற்றவர்கள் நிரப்பி வருகின்றனர்.

எம் உணவுகளை உயர்தரமாக வழங்கக்கூடிய பெரிய உணவகங்களை வடக்கில் உருவாக்க வேண்டும். எம் உணவுகளின் சிறப்பை வெளிநாட்டவர்களும் அனுபவிக்க வேண்டும். ஆனால், எதிர்மாறாக, நாம் பிரியாணி மற்றும் பீட்சா சாப்பிடுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழர் வணிகர்கள் சிலர் நியாயமான விலைகளில் வியாபாரம் செய்யாமல், அதிக லாப நோக்குடன் செயல்படுவதால், மக்கள் பெரும்பாலும் வெளிநாட்டு முதலீடுகளிடம் செல்லும் சூழல் உருவாகியுள்ளது. இது எந்த சமூகத்திலும் நடைபெறும் இயல்பான செயலாகும்.

மேலும், யாழ்ப்பாணத்தில் புடவை வியாபாரம், உணவு வியாபாரம், இறைச்சி வியாபாரம் உள்ளிட்ட பல தொழில்கள் முஸ்லிம் சமூகத்திடம் மாறிவிட்டது. தமிழ் வணிகர்கள் இணைந்து செயல்படாமை, குறுகிய லாப நோக்கத்துடன் செயல்படுதல் போன்ற காரணங்களால், தமிழர்களுக்குரிய வணிகங்கள் வேறுபட்ட சமூகத்தவர்களிடம் சென்றுள்ளன.

இதற்கு காரணம், போர் முடிந்த பிறகு தமிழர்கள் பாரிய முதலீடுகளை செய்யாததே. அதன் இடத்தை மற்றவர்கள் நிரப்பி, லாபம் ஈட்டி வருகின்றனர். பொருளாதார வீழ்ச்சி இன அழிவின் ஓர் அங்கமாகும். பொருளாதார ரீதியாக பலவீனமான மக்கள் எளிதாக ஒடுக்கப்பட்டுவிடுவர். ஆகவே, நாம் எமது பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டும்.

நன்றி,
மதுசுதன்
01.03.2025

- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -spot_img
Latest News

சாதாரண வேலை பார்க்கும் பிரான்ஸ் ஈழ தமிழர் ஒருவரின் மகனின் முன்மாதிரியான செயற்பாடு! 

எமது மக்கள் கிட்டத்தட்ட ஒரு லட்சத்தை அண்மித்து பிரான்ஸில் வாழ்கின்றனர்.அநேகமாக எல்லோருமேதமிழர்களுக்கும் பண்பாடுகள்,பிரான்ஸ் நாட்டின் சில பல சரியான வழிமுறைகளை எடுத்து கொண்டு எமதுவாழ்க்கையை உருவாக்கி வாழ்கின்றோம் ஆனாலும் இலங்கையில் இருந்து வந்து கடினமாக உழைத்து முன்னேறும் பெற்றோர்கள்,தமது பிள்ளைகளுக்குசொகுசான பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்து கொடுக்கின்றனர்.ஆனால் சொகுசான பாதுகாப்பானவாழ்க்கை அவர்களை கொஞ்சம் பலவீனப்படுத்தி கொள்கின்றது. எனவே எமது பிள்ளைகளை நிதி கையாளுதலை நாம் முழுமையான பொறுப்பாக எடுத்து கொள்வதை விடஅவர்களை சிறு வயது முதலே சரியாக பழக்கி எடுத்து கொள்வதே சிறப்பாக இருக்கும்.எவ்வாறு சிறப்பாக ஒருமாணவராக குடும்ப பணத்தில் தங்கி வாழாமல் சொந்தமாக வாழும் போதே நமக்கான புதிய சவால்களை சரியாகசந்தித்து கொள்ள முடியும்!  இல்லையென்றால் நமது பெற்றோர்கள் தாங்கள் பார்த்து கொள்வார்கள் என்ற பாசத்தில் தமது பிள்ளைகளைபலவீனப்படுத்தி விடுவார்கள்! உங்கள் பிள்ளைகளை ஒருவர் இருவர் என்று பார்க்காதீர்கள்! அடுதடுத்ததலைமுறையை உருவாக்க போகின்றவர்கள் என்று பாருங்கள்! எனவே உங்கள் பிள்ளை பிள்ளையின் பிள்ளைஎன தொலைநோக்காக சிந்தித்து விதைகளை இப்பவே போடுங்கள்... உலகில் பெரிதாக நல்லா வரும் எல்லா குடும்பங்களும் இப்படி சிந்தித்து வளர்ந்து வந்தவைதான்! எதையும்யோசிக்காமல் குறுகிய வட்டத்தில் பாசத்தை கொட்டி பலவீனப்படுத்தி குடும்பம் பிள்ளைகளை கெடுத்து நாம்என்னத்தை காண போகிறோம்? இதற்காகவே இவ்வளவு தூரம் வந்து கஷ்டப்படுகிறோம்?  பிரான்ஸில் நிதி மேலாண்மை தொடர்பில் பிரான்ஸில் சாதரண வேலை பார்க்கும் தமிழர் ஒருவரின் மகன்எவ்வாறு தனது பணத்தை படித்து கொண்டே உழைத்து கொள்வது தொடர்பாகவும் தமது வீட்டில் பணத்தைஎவ்வாறு நிர்வகிப்பது தொடர்பிலும் எங்களுக்கு எழுதி அனுப்பிய கட்டுரை முழுவடிவம் கீழேகொடுத்துள்ளோம்... கவனமாக வாசித்து தேவையானதை எடுத்து மனதில் இருத்தி கொள்ளுங்கள்!  பணத்தை உழைப்பதை காட்டிலும் நிர்வகித்து கொள்வதே மிக கடினம்,எல்லாராலும் உழைக்க முடியும் ஆனால்உழைத்த பணத்தை நிர்வகிக்க முடியாது! சரியான பண நிர்வாகம்தான் உங்களுக்கும் பிரான்ஸின் மிகபெரியபணக்காரன் ஆர்னால்ட்டுக்கும் இடையிலான சின்ன வித்தியாசம்.. காரணம் நீங்கள் இருவர் கையிலும் ஒருகாலத்தில் 1000€ தான் இருந்தது.. ஆனால் இன்று அவர் பல லட்சம் கோடி யூரோக்களுக்கு அதிபதி! நாம்இன்னும் சில பல ஆயிரம் யூரோக்களிடையேதான் எமது வாழ்க்கை ஓடி கொண்டுள்ளது. அறிமுகம்: பிரான்சில் ஒரு மாணவராக உங்கள் கல்விப் பயணத்தைத் தொடங்குவது, உங்கள் நிதியை திறம்படநிர்வகிப்பது உட்பட உற்சாகமான வாய்ப்புகளையும் சவால்களையும் சமாளிக்க கற்று தரும். மாணவர்வாழ்க்கைக்கான பட்ஜெட்டில் இருந்து உதவித்தொகை மற்றும் மானியங்கள், பகுதி நேர வேலை வாய்ப்புகள், மாணவர் கடன்கள் மற்றும் வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குதல் வரை, இந்த கட்டுரை பிரான்சில் உள்ளமாணவர்களுக்கு ஒரு விரிவான வழிகாட்டியாக செயல்படுகிறது.   இவற்றின் முக்கிய அம்சங்களை ஆராய்வோம் மற்றும் நிதி சவால்களை வெற்றிகரமாக வழிநடத்துவதற்கானஉத்திகளைக் கண்டுபிடிப்போம்.  மாணவர் வாழ்க்கைக்கான பட்ஜெட்: உங்கள் படிப்பு முழுவதும் நிதி ஸ்திரத்தன்மையை பராமரிக்க யதார்த்தமான பட்ஜெட்டை உருவாக்குவதுமிகவும் முக்கியமானது.  வாடகை, பயன்பாடுகள், மளிகை பொருட்கள், போக்குவரத்து மற்றும்பாடப்புத்தகங்கள் போன்ற உங்களின் அத்தியாவசிய செலவுகளை பட்டியலிடுவதன் மூலம் தொடங்கவும்.  அதுஉங்கள் பணமோ இல்லை அம்மா அப்பா பணமோ... வரவு செலவை சரியாக வைத்து கொள்ளுங்கள்.  உங்கள் பட்ஜெட்டில் ஒரு பகுதியை ஓய்வு நேர நடவடிக்கைகள் மற்றும் பொழுதுபோக்கிற்காக ஒதுக்குங்கள்.  உங்கள் வருமானம் மற்றும் செலவுகளை திறம்படக் கண்காணிக்க பட்ஜெட் பயன்பாடுகள் அல்லதுவிரிதாள்களைப் பயன்படுத்துங்கள்,நான் சொந்த கையால் எழுதி வைப்பதை அதிகம் விரும்புகின்றேன். எடுத்துக்காட்டு செலவுகள்: வாடகை: சராசரி மாணவர் விடுதி / உங்கள் வீட்டு வாடகை செலவுகள் நகரம் மற்றும் வீட்டு வகையைப்பொறுத்து மாதத்திற்கு € 300 முதல் € 800 வரை இருக்கலாம். பயன்பாடுகள்: இதில் மின்சாரம், தண்ணீர், இணையம் மற்றும் வெப்பமாக்கல் ஆகியவை அடங்கும்.  சராசரியாக, மாதத்திற்கு €70 முதல் €150 வரை செலவாகும். மளிகை பொருட்கள்: உங்களின் உணவுப் பழக்கம் மற்றும் இருப்பிடத்தைப் பொறுத்து, உணவுச்செலவுகளுக்காக மாதத்திற்கு சுமார் €150 முதல் €200 வரை ஒதுக்குங்கள். போக்குவரத்து: பாரிஸ் போன்ற முக்கிய நகரங்களில் பொது போக்குவரத்து பாஸ்கள் பாஸ் வகை மற்றும்பயணித்த தூரத்தைப் பொறுத்து மாதத்திற்கு €20 முதல் €75 வரை இருக்கும். உதவித்தொகை மற்றும் மானியங்கள்: பிரான்சில் உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் பல்வேறு உதவித்தொகை மற்றும் மானியங்களை ஆராயுங்கள்.  பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்கும் உதவித்தொகைகளைஆராய்வதன் மூலம் தொடங்கவும்.  பகுதி நேர வேலை வாய்ப்புகள்: படிக்கும் போது பகுதிநேர வேலை செய்வது நிதி ஸ்திரத்தன்மை மற்றும் மதிப்புமிக்க பணி அனுபவத்தைஅளிக்கும்.  வளாகத்திலோ அல்லது நெகிழ்வான அட்டவணையை வழங்கும் உள்ளூர் நிறுவனங்களிலோவேலை வாய்ப்புகளைத் தேடுங்கள்.  பிரான்சில் உள்ள மாணவர்களுக்கான பிரபலமான விருப்பங்களில்Training, விருந்தோம்பல், சில்லறை விற்பனை அல்லது Freelance வேலை ஆகியவை அடங்கும்.  உங்களின்பணிக் கடமைகள் உங்கள் கல்விச் செயல்திறனில் தலையிடாது என்பதை சரியாக உறுதி செய்து கொள்ளவும் மாணவர் கடன்கள்: உங்கள் கல்விச் செலவுகளை ஈடுகட்ட உதவித்தொகை மற்றும் பகுதி நேர வேலை போதுமானதாக இல்லைஎன்றால், மாணவர் கடன்கள் ஒரு சாத்தியமான விருப்பமாக இருக்கும்.  பிரான்சில், நிதி நிறுவனங்கள் மற்றும்அரசாங்க ஆதரவு அமைப்புகளால் வழங்கப்படும் கடன் திட்டங்களை ஆராயுங்கள்.  மாணவர் கடனைப்பெறுவதற்கு முன் விதிமுறைகள், வட்டி விகிதங்கள் மற்றும் திருப்பிச் செலுத்தும் திட்டங்களை கவனமாகமதிப்பிடுங்கள்.  உங்களுக்குத் தேவையானதை மட்டும் கடன் வாங்குவதில் கவனமாக இருங்கள் மற்றும்உங்கள் படிப்பை முடித்த பிறகு திருப்பிச் செலுத்துவதற்கான தெளிவான திட்டத்தை வைத்திருக்கவும். வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குதல்: படிக்கும் போது, ​​உங்கள் மாணவப் பருவத்தைத் தாண்டி உங்களுக்குப் பயனளிக்கும் நல்ல நிதிப்பழக்கங்களை வளர்த்துக் கொள்வது அவசியம்.  எதிர்பாராத செலவுகளைக் கையாள அவசர நிதியைஉருவாக்குவதன் மூலம் தொடங்கவும்.  மாணவர் சேமிப்புக் கணக்கைத் திறப்பதைக் கருத்தில் கொண்டு, அதில்தவறாமல் பங்களிக்கவும்.  வரிச் சலுகைகள் மற்றும் அதிக வட்டி விகிதங்களை வழங்கும் Livret Jeune அல்லதுLivret A போன்ற மாணவர்களுக்கு ஏற்ற முதலீட்டு வாய்ப்புகளை ஆராயுங்கள்.  உங்கள் செலவுகளைக்கண்காணிப்பது, பணத்தைச் சேமிப்பது மற்றும் நீண்ட காலத்திற்கு முதலீடு செய்வது போன்ற பழக்கத்தைவளர்த்துக் கொள்ளுங்கள். முடிவுரை: பிரான்சில் ஒரு மாணவராக நிதி சவால்களை வழிநடத்துவதற்கு கவனமாக திட்டமிடல் மற்றும் செயல்திறன்மிக்க நிதி மேலாண்மை தேவை.  மாணவர் வாழ்க்கைக்கான பட்ஜெட், உதவித்தொகை மற்றும் மானியங்களைஆராய்வதன் மூலம், பகுதி நேர வேலை வாய்ப்புகளை கருத்தில் கொண்டு, மாணவர் கடன்களைப்புரிந்துகொள்வது மற்றும் வலுவான நிதி அடித்தளத்தை உருவாக்குவதன் மூலம், உங்கள் கல்விப் பயணத்தின்போது நீங்கள் நிதி ஸ்திரத்தன்மையை அடைய முடியும்.  நிதி ஆலோசகர்களிடமிருந்து ஆலோசனையைப்பெறவும், உங்கள் கல்வி நிறுவனத்தில் உள்ள வளங்களைப் பயன்படுத்தவும், உங்கள் நிதிகளை பொறுப்புடன்நிர்வகிக்கும் போது உங்கள் கல்வி இலக்குகளுக்கு எப்போதும் முன்னுரிமை அளிக்கவும்.  புத்திசாலித்தனமானநிதித் திட்டமிடல் மூலம், உங்கள் மாணவர் ஆண்டுகளைத் தாண்டி வெற்றிகரமான எதிர்காலத்திற்கானஅடித்தளத்தை நீங்கள் அமைக்கலாம்.
- Advertisement -spot_img

More Articles Like This

- Advertisement -spot_img