சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiraam Chandrelegar) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சுக் (Zug) நகரில் அந்நாட்டு இராணுவத் தலைவர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று வெற்றிகரமாக நடைபெற்றுள்ளது.
கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ASMD அமைப்பின் சார்பில், அதன் புதிய தலைவரான லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் (Lt. David M. V. Kremer) மற்றும் துணைத்தலைவர் லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் ஆகிய இருவரும் முதல்முறையாக இராணுவத் தலைமையுடன் உத்தியோகபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சிலர் மார்ட்டின் பிஃபிஸ்டர் (Martin Pfister) மற்றும் சுவிஸ் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பெனடிக்ட் ரூஸ் (Lt. Gen. Thomas Süssli / Benedict Roos) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய உலகளாவிய பாதுகாப்புக் கொள்கை சவால்கள், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் சுவிஸ் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் மருத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
ஈழத்தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒரு இளைஞர், சுவிஸ் நாட்டின் மிக உயர்ந்த இராணுவப் பொறுப்புக்களில் ஒன்றைப் பெற்றுள்ளதுடன், கொள்கை வகுப்பு ரீதியான சந்திப்பில் கலந்துகொண்டமை புலம்பெயர் சமூகத்தினர் மத்தியில் பெரும் பெருமிதத்தை ஏற்படுத்தியுள்ளது
