Thursday, March 12, 2026
No menu items!

மொசாட் படு பயங்கரவாதிகள்: 1984ல் சிக்கிய இலங்கை ஜனாதிபதி!

இஸ்ரேலிய ‘மொஸாத்’ என்பதுதான் என்ன?

1950-ம் ஆண்டுத் தொடக்கத்தில் அரசியல் உளவு வேலைக்கும், பயங்கரவாதத்திற்குமானதொரு கருவியாக இந்த ‘மொஸாத்’ ஸ்தாபனம் அமைக்கப்பட்டது.1948-ல் பாலஸ்தீன கிராமங்களிலும்’ 1953-ல் லிபியாவிலும் புகுந்து சூறையாடி மக்களைக் கொன்று குவித்த ஈவிரக்கமற்ற அரக்கர் கூட்டம் தான் ‘மொஸாத்’தின் முன்னோடி.

அயல் நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பு, வன்முறை, தனி நபர் பயங்கரவாதம் ஆகியவற்றின் மூலம்’ இஸ்ரேலிய நலன்களை விஸ்தரிக்கும் நோக்குடனேயே ‘மொஸாத்’ நிறுவப்பட்டது என்று யூத உளவு ஸ்தாபனத்தின் முதலாவது அதிபரான இஸார் ஹாரல் என்பவர் தனது நினைவுக் குறிப்புக்களில் எழுதியுள்ளார்.’மொஸாத்’ ஸ்தாபனத்தின் தலைவர், இஸ்ரேலியப் பிரதமருக்கு மட்டுமே பதில் சொல்லக் கடமை பட்டவர்.

மொஸாத்’ கொலை பாதகர்கள் பற்பல வழிகளில், அபார திறமையுடன் ஆட்களை தீர்த்துக் கட்டக் கூடியவர்கள். புற்று நோயினாலோ’ அல்லது மாரடைப்பினாலோ, அல்லது தெரு விபத்தினாலோ ஒருவர் இறந்து விட்டதாகப் பிறர் கருதும் வண்ணம் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கும் திறமை கொண்டவர்கள் அவர்கள்.

பற்பல பிற்போக்கு தேசிய ஸ்தாபனங்களின் ஆதரவுடன் பல நாடுகளிலும் ‘மொஸாத்’ தமது பயங்கர நடவடிக்கைகளை விஸ்தரித்துள்ளது.1972, செப்டம்பர் 8-பாரிசில் பாலஸ்தீன விடுதலை இயக்கப் பிரதிநிதியான மஹ்மது எல் ஹம்ச்சாரி கொல்லப்பட்டார். அவரது டெலிபோனுக்கு அடியில் வைக்கப் பட்டிருந்த ரேடியோக் கட்டுப்பாட்டு குண்டு வெடித்தது.

அதே ஆண்டு அக்டோபர். திரிபோலியில் கடிதத்தினுள் வைத்து அனுப்பப்பட்ட வெடிபொருளால்பாலஸ்தீன அலுவலகச் செயலாளர் தனது கண்களிரண்டையும் இழந்தார்.

1973, பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர்களில் ஒருவரான அபுயூசுப் என்பவரும், அவரது மனைவியும் கொலையுண்டனர். சில தினங் களுக்குப் பின்னர் பாரிஸ் நகரில், ஒரு ஹோட்டலில் இருந்து வெளிவரும்போது. பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவரான டாக்டர் பாஸில் அல்கான்பாசி கொலை செய்யபட்டார்.

இப்படிக் கொலையானவர்களின் பட்டியல் மிகநீளமானது. யூசுப் எல்நாதியார் கமால் அத்வரன், பெய்ரூட்டில் கொலையுண்டார். பாலஸ்தீனத் தலைவரான (பிஎல்ஓ ) கமால் உசேனும், லெபனான் பத்திரிகையாள நாசர் மேட்டரும் இத்தாலியில் படுகொலை செய்யப் பட்டனர். பிஎல்ஓ உதவித் தலைவரான ஃபாதல் அல்தானி பாரிசில் வீழ்த்தப்பட்டார்.’பிஎல்ஓ’ அணியைச் சேர்ந்தோர்தான் இவ்வாறு படுகொலை செய்யப்பட்டனர் என்றில்லை.

மூன்றாவது நாடுகளில் வசித்துக் கொண்டிருந்த அரபு நாடுகளைச் சேர்ந்த பல தனிப்பட்டவர்களும், ‘மொஸாத்’த்தின் கொலை வெறிக்கு ஆளாகியுள்ளனர்.இத்தகைய கொலைகளைத் தவிர வெளிநாடுகளில் குழி பறிப்பு வேலைகளையும் பெரும் அளவிலான பயங்கர நடவடிக்கைகளையும் கூட ‘மொஸாத்’ நடத்தி வருகிறது.

1968 நவம்பரில், 200 டன் யுரேனியத்தை ஏற்றிக் கொண்டு ஆன்ட்வெர்ப்பில் இருந்து, ஜெனோவாவுக்குப் பயணம் செய்து கொண்டு இருந்த் கப்பல் நடுக்கடலில் மர்மமான முறையில் மறைந்து விட்டது. பின்னர் அது இஸ்ரேலியத் துறைமுகம் ஒன்றில் தோன்றிற்று. இந்த மாயாஜாலத்தை செய்தது ‘மொஸாத், குழுவினர்தான்.

1976-ல் அன்னிய நாட்டு சீருடைகளை அணிந்து கொண்டு. பல ஆப்பிரிக்க நாடுகளது வான்வெளியிலும் அத்துமீறிப் பறந்து, ‘மொஸாத் அதிரடிப் படையினர்.உகாண்டா நாட்டின் விமான தளத்தில் இறங்கினர். அவர்களது துப்பாக்கிச் சூட்டிற்கு பலர் பலியாயினர். இன்னும் பலர் காயமடைந்தனர்.

‘மொஸாத்’திற்கும், அமெரிக்க சி.ஐ.ஏ.க்கும் இடையே காணப்படும் ஒருங்கிணைவு மிகப் பெரும் அபாயத்தைத் தோற்றுவிக்கிறது.சி.ஐ.ஏ -யின் ஆணைகளின் படி ‘மொஸாத்’ ஏஜெண்டுகள், வளரும் நாடுகளில் ஆட்சிக் கவிழ்ப்பிலும், பிற் போக்கு அரசுகளுக்கு முட்டுக் கொடுப்பதிலும், சில நாடுகளின் அரசாங்க எதிர்ப்பு ஸ்தாபனங்களுக்கு ஆயுதங்களை வழங்குவதிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆப்கானிஸ்தான் கலகக்காரர்களுக்கு ‘மொஸாத்’தும் சி. ஐ. ஏ-யும் ஆயுத உதவி செய்கின்றன. பஞ்சாபில் தற்போது தடை செய்யப்பட்டுள்ள தால்காசா. ஸ்தாபனத்திற்கு நிதியுதவி அளித்தன. எல்சால்வடார், கௌதமாலா, ஹோண்டுராஸ் நாடுகளின் சர்வாதிகாரிகளுக்கும், இஸ்ரேலியத் தலைவர்களுக்கும் இடையே தொடர்புகளை ‘மொஸாத்’ ஏஜெண்டுகள் ஏற்படுத்திக் கொடுக்கின்றனர்.

சுருங்கக் கூறின், அரசியல் கொலை, அச்சுறுத்தல், வெகு ஜனக் கொலை, ஆட்களைக் கடத்துதல் உட்பட பற்பல பயங்கரக் குற்றங்களிலும் தேர்ச்சி பெற்ற சர்வதேச பயங்கரவாதக் கும்பல்தான் ‘மொஸாத்’ அது சி.ஐ.ஏ-யின் கூட்டாகப் பணியாற்றும் ஸ்தாபனம்.

அதனால்தான், அந்த ஸ்தாபனத்துடன் இலங்கை அரசு ஒத்துழைப்பதற்கான திட்டத்தை அந்த நாட்டின் முற்போக்கு சக்திகள் எதிர்க்கின்றன.’பயங்கரவாதத்தை’ எதிர்ப்பதாகக் கூறும் ஜெயவர்த்தனே, படு பயங்கரவாதிகளிடம் சரணடைகிறார்.

-வீரவேங்கை இதழ், ஜூலை 1984.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

சுவிஸில் இராணுவத்தின் முக்கிய அமைப்பின் துணைத்தலைவராக ஈழத்தமிழர் தெரிவு

சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt....

சினி திரைகளுக்கு பின்னால்: தற்குறிகளின் தத்துவம்!

சினிமாத் துறை குறித்து எனக்கு கடுமையான விமர்சனங்கள் உண்டு(அரசியலுக்கு வரும் போது மட்டும் இன்னும் கடுமையாக விமர்சிக்க வேண்டியது தவிர்க்க முடியாதது – ஒரு சாட்டையடி...

யாழில் இன்று பிரான்சிலிருந்து வந்தவர்கள் உட்பட ஐவருக்கு நேர்ந்த கதி

யாழ்ப்பாணத்தில் கார் - முச்சக்கர வண்டி மோதல் விபத்து: பிரான்ஸ் சுற்றுலாப்பயணிகள் உட்பட 5 பேர் படுகாயம் யாழ்ப்பாணம், மார்ச் 12, 2026 – யாழ்ப்பாணம் மண்கும்பான்...

More Articles Like This