Friday, April 3, 2026
No menu items!
- Advertisement - Call - 0778999965spot_img
- Advertisement - Call - 647-531-4648spot_img

கனடாவிலிருந்து நாடு கடத்தப்படும் MV Sun sea ஈழ தமிழர்!

- Advertisement -spot_img

2010 ஆகஸ்ட் மாதம், தாய்லாந்திலிருந்து புறப்பட்ட எம்.வி. சன் சீ (MV Sun Sea) கப்பல் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா கடற்கரையை அடைந்தது. இதில் 492 ஈழத் தமிழர்கள் (380 ஆண்கள், 63 பெண்கள், 49 சிறுவர்கள் உட்பட) வந்திருந்தனர். இலங்கையில் 2009-ல் கொடூர இனப்படுகொலை போர் முடிவடைந்த பின்னர் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல், கைது மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக அகதிகளாக வந்தவர்கள் இவர்கள் எனக் கூறப்பட்டது.

ஆரம்பத்தில் கனடா அரசால் அனைவருக்கும் எதிராக அகதி உரிமை வழக்குகள் தொடரப்பட்டன. மனிதக் கடத்தல் மற்றும் பயங்கரவாதத் தொடர்பு குற்றச்சாட்டுகளுடன் பலர் நீண்டகாலம் தடுத்து வைக்கப்பட்டனர். Immigration and Refugee Board (IRB) மூலம் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில், சுமார் 228 பேரின் அகதி உரிமை ஏற்றுக்கொள்ளப்பட்டது. 116 பேரின் உரிமை மறுக்கப்பட்டது. LTTE உறுப்பினர் என்று நிரூபிக்கப்பட்டவர்கள் மிகக் குறைவு (சுமார் 11 பேர் மட்டும்). இதுவரை 30 பேருக்கு மட்டுமே நாடு கடத்தல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இவ்வாறு இருக்க இதே கப்பலில் வந்து கனேடிய குடியுரிமை (Permanent Residency அல்லது Citizenship) பெற்ற பலர் இன்று இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்று திரும்புகின்றனர் . இந்தப் பயணங்கள் சட்டபூர்வமானவை. அகதியாக அங்கீகரிக்கப்பட்டு கனடிய குடிமக்களாக மாறியவர்களின் உரிமை அவை , இது 2010-ல் இருந்த அப்போதைய இலங்கை நிலவரத்தின் அடிப்படையில் அளிக்கப்பட்டது.

ஆனால்,அதே கப்பலில் வந்து அகதி உரிமை மறுக்கப்பட்டவர்கள் இன்னும் நிலையற்ற நிலையில் (limbo) உள்ளனர். சிலர் 16 ஆண்டுகளுக்குப் பின்னரும் deportation அச்சத்தில் வாழ்கின்றனர். அண்மையில் குகதீஸ்வரன் துரைசிங்கம் (Kugatheeswaran Thuraisinkam / Kumar Thuraisinkam) என்பவரின் வழக்கு இதற்கு உதாரணமாகக் குறிப்பிடப்படுகிறது. 2010-ல் சன் சீ கப்பலில் வந்த அவர், அகதி உரிமை மறுக்கப்பட்ட நிலையில், ஏப்ரல் 16, 2026 அன்று நாடு கடத்தப்படும் திட்டம் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தனக்கு சிறை, சித்திரவதை, கைது மற்றும் மரண அபாயம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். MV Sun Sea-யில் வந்ததால் LTTE ஆதரவாளர் என்று பார்க்கப்படலாம் என்ற அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே,முன்பு நாடு கடத்தப்பட்ட சிலருக்கு இலங்கையில் சித்திரவதை ஏற்பட்டதாக affidavit (உறுதிமொழி) ஆவணங்கள் உள்ளன. 2011-ல் deported செய்யப்பட்ட Sathyapavan Aseervatham என்பவர், இலங்கை சிறையில் சித்திரவதைக்கு உள்ளாகியதாகக் கூறியுள்ளார். இத்தகைய சம்பவங்கள், failed asylum seekers திரும்பினால் விமான நிலையத்தில் CID அல்லது SIS விசாரணைக்கு உள்ளாகலாம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன.

அகதி உரிமைக்காக சிலர் கனடா அரசை “ஏமாற்றினார்களா” என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. அனைவருக்கும் ஆரம்பத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் சிலரின் உரிமை சாட்சியங்கள் மற்றும் இலங்கை நிலவர அறிக்கைகளின் அடிப்படையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், இதை பொதுவாக “பொய் சொல்லி ஏமாற்றியது” என்று கூற முடியாது. IRB மதிப்பீடுகள் தனிப்பட்ட ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டவை. சில உரிமைகள் நீதிமன்றத்தில் திருத்தப்பட்டுள்ளன.

இன்று இலங்கை அரசு “நாடு பாதுகாப்பானது” என்று கூறி, தமிழ் அகதிகளை (குறிப்பாக இந்தியாவிலிருந்து) திரும்ப அழைக்கிறது. சிலர் திரும்பியும் உள்ளனர். ஆனால், மனித உரிமை அமைப்புகள் (Human Rights Watch, Amnesty International உள்ளிட்டவை) வடக்கு-கிழக்கில் இராணுவ கண்காணிப்பு, அரசியல் எதிர்ப்பாளர்களுக்கு அச்சுறுத்தல் தொடர்வதாகத் தெரிவிக்கின்றன. Failed asylum seekers-க்கு இலங்கைக்குப் பயணம் எளிதல்ல; அவர்களுக்கு ஆபத்து இருக்கலாம்.

கனடா அரசு ஆரம்பத்தில் “பயங்கரவாதிகள்” என்று பிரச்சாரம் செய்தாலும், பின்னர் பெரும்பாலான உரிமைகளை இவர்களுக்கு கொடுத்தது . தற்போதும் deportation நடவடிக்கைகள் தொடர்கின்றன. தமிழ் சமூகம் அங்கும் இங்குமாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.இந்த விவகாரம் கனேடிய அகதி முறைமையின் சிக்கல்களை வெளிப்படுத்துகிறது. அகதி உரிமை அப்போதைய நிலவரத்தின் அடிப்படையில் அளிக்கப்படுகிறது.

முக்கிய ஆதாரங்கள்:

👆 பார்க்க அழுத்துங்கள்

spot_img
More News
spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here