07.04.2009 எம்மை விட்டு அண்ணா பிரிந்து சென்றநாள் இன்று அண்ணாவின் நினைவுநாள் 17 வருடங்கள் கடந்துவிட்டன. அன்றைய நாளை மீட்டு பாக்கின்றேன் அன்று அதிகாலை எங்கள் குடும்பத்தில் அன்றைய காலத்தில் ஒரு நடைமுறை இருந்தது யாரும் ஒன்றாக குடும்பமாக நித்திரை கொள்ளக்கூடாது என்று நடைமுறை இருந்தது.
ஏன்? என்றால் விழந்து கொண்டு இருக்கும் செல்களின் நடுவில் உயிர்கள் பிரிந்து கொண்டிருந்தவேளை தனித்து தனித்து படுப்பதன் மூலம் குடும்பத்தில் யாராவது ஒருவராவது உயிருடன் பிழைக்க வாய்ப்பு உண்டு அதன் காரணமாகதான் அவ்வாறு ஒரு நடைமுறை இருந்தது. நானும் அம்மாவும் எங்கள் கூடாரத்தை விட்டு சிறிது தொலைவில் உள்ள வேறு ஒருவருக்கு சொந்தமான பதுங்கு குழியுடன் கூடிய கூடாரத்தில் இரவு படுத்துவிட்டு பகல் எழும்பி இருந்தோம்.
அண்ணா எங்கள் கூடாரத்திலேயே படுத்து உறக்கிக்கொண்டு இருந்தான். நானும் விடிய எழும்பி விட்டேன் காலையில் ஆரம்பித்தது அந்த ஒரு செல் அடி ஓடி சென்று பதுங்கு குழிக்குள் குதித்தேன் குதிக்கும் வேளை மண்டையில் அடிபட்டுவிட்டது எனக்கு (அதே வேளை செல் குத்தி வெடித்தது எனது அண்ணாவின் தலையின்தான் பிஸ் அடி பட்டு இறந்து இருந்தான் அதே வேளை) சரியாக பயந்துவிட்டேன்.
அம்மா அண்ணாவை பாக்க போகின்றேன் என்று சென்றார்கள் சென்று சிறிது நேரத்தில் அம்மாவின் கதறல் குரல் கேட்டவண்ணம் இருந்தது யாரும் வெளியில் செல்ல துணியவில்லை. அங்கு நடந்த சம்பவத்தை Suren Karththikesu எழுதி இருப்பார் அந்த இடத்திற்கு நான் செல்லவில்லை பல மணி நேரங்களுக்கு பின் என்னை அழைத்து செல்ல இருவர் வந்தனர் உண்மையில் எனக்கு அவர்கள் யார்? என்பது மறந்து விட்டது.
மரண பயத்தில் இருந்தநேரம் அது சுற்றி தூரத்தில் செல் குத்தி குத்தி வெடிக்க அவர்கள் கூட்டிக்கொண்டு செல்வதும் நான் போகும் வழி எங்கும் பங்கரை நோக்கி ஓடுவதுமாக இருந்தேன் அது தூரத்திலடா வாடா என்று அவர்கள் அழைத்து சென்றனர் புதுவை இரத்தினதுரை அப்பா என்று ஒரு குறுகிய அளவில் கூட்டம் எனது அக்கா புலிகளின் இராணுவ சீருடையில் வந்து இருந்தாள் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்கள் அகவணக்கம் செலுத்திக்கொண்டு இருந்தார்.
அவருக்கும் கண்டிப்பாக மனம் நொந்து இருப்பார் ஏன் ?என்றால் அண்ணா அதிகமாக அவரின் வீட்டில்தான் நிப்பான் அரசியல்துறை பொறுப்பாளர் நடேசன் அவர்களின் மகனும் அண்ணாவும் நல்ல நண்பர்கள் அதனால் நாள்கணக்கில் அவர்கள் வீட்டில் தங்கி இருந்துவிட்டு கூட வருவான் அண்ணா அவருக்கு பிடித்த ஒருவனாகவே இருந்தான் அப்படி இருக்கையில் அவருக்கும் அது மனவேதனையை கொடுத்து இருக்கும் நடேசன் அண்ணையின் மகனின் game boy -யை விளையாட வீட்டுக்கு எடுத்து வந்திருந்தான்.
அண்ணா அதை நான்தான் அதிகமாக விளையாடுவது அது இறுதியாக என்னிடமே இருந்தது. மேசையில் அவனை துணியால் சுற்றி வைக்கப்பட்டு இருந்த காட்சி இப்போதும் கண்ணுக்குள் சில நினைவுகள் சுட்டுப்போட்டாலும் மறக்காது என்பார்கள் அவ்வாறுதான் அவன்கிடந்த அந்த காட்சி மனதைவிட்டு அகன்று செல்லாது. இறுதியாக அருகில் இருந்த சுடுகாட்டில் அவனை எங்கள் கைகளால் மண் அள்ளிப்போட்டு இறுதியில் புதைத்துவிட்டுவந்தோம்.
(குழிகளை தொண்டியதில் இருந்து அங்கு நின்று பல உதவிகள் செய்தது Suren அண்ணாதான்) எங்களுக்கு ஒத்தாசையாக பல உதவிகளை எமது கவிஞர் புதுவை இரத்தினதுரை அவர்களும் மேற்கொண்டார். அந்த நேரங்களில்.. அடிக்கடி சண்டைபோட அவன் ஒருத்தன்தான் இருந்தான் அண்ணா என்று இருந்தான் நான் வீட்டில் இல்லாத நேரங்களில் அம்மாவிடம் கேப்பானாம் கேதன் எங்க போய்ட்டான் அவனுடன் சண்டைபோடாமல் தனகாமல் இருக்க முடியவில்லை என்று இன்று நான் இருக்கின்றேன் என்னுடன் தனக சண்டைபோட அவன் இல்லை…
