Thursday, March 12, 2026
No menu items!
Home Blog Page 111

Uncovering the Role of Tamil in Ancient Trade and Commerce

0

Tamil is a Dravidian language that has a long and rich history. While it is widely known for its cultural and literary contributions, Tamil also played an important role in ancient trade and commerce. The use of the Tamil language in trade and commerce can be traced back to several thousand years.

The ancient Tamil merchants used the language as a means of communication during their trade expeditions to various parts of the world, including Southeast Asia, Africa, and Europe. Tamil was also used as a lingua franca in the Indian Ocean trade network, which connected the coastal regions of the Indian subcontinent with the rest of the world.

One of the earliest known evidence of the use of Tamil in trade and commerce is the Tamil-Brahmi inscriptions that have been found in the city of Anuradhapura in Sri Lanka. These inscriptions date back to the 3rd century BCE and provide evidence of the widespread use of the Tamil language in ancient times.

Tamil also played an important role in the development of the maritime trade network in ancient times. The ancient Tamil merchants were known for their seafaring skills and their ability to navigate the seas. They used their knowledge of the sea routes to trade with other countries, and the Tamil language became a common medium of communication during these trade expeditions.

In addition to its use in trade and commerce, Tamil was also used in religious and cultural exchanges between various civilizations. The language was used to spread the teachings of Buddhism and Hinduism, and Tamil scholars played an important role in the transmission of knowledge and ideas between different civilizations.

In conclusion, Tamil played an important role in ancient trade and commerce and was widely used as a means of communication in the Indian Ocean trade network. Its widespread use in trade and commerce helped to shape the history and culture of South India and beyond. Today, the Tamil language continues to play an important role in the economic and cultural development of the region.

Discover the Roots of the Oldest Datable Language – Tamil

0

Tamil is a Dravidian language that is spoken by more than 70 million people worldwide. It is one of the oldest datable languages in the world and has a rich history that dates back to several thousand years. This language has a unique cultural significance and has played an important role in shaping the history and culture of South India.

The earliest evidence of the Tamil language can be traced back to the Sangam literature, which was written between the 3rd century BCE and the 3rd century CE. This literature is considered to be the oldest datable source of Tamil language and is a rich source of information about the language, culture, and history of Tamil Nadu. The Sangam literature consists of more than 2,000 poems written by Tamil poets and reflects the social, cultural, and political aspects of ancient Tamil society.

Tamil was also one of the languages used in early Indian trade, and the earliest known Tamil-Brahmi inscriptions have been found in the city of Anuradhapura in Sri Lanka. These inscriptions date back to the 3rd century BCE and provide evidence of the widespread use of the Tamil language in ancient times.

In addition to the Sangam literature, Tamil has also been influenced by various other languages and cultures throughout its history. During the colonial period, the language was heavily influenced by Portuguese, Dutch, and English. In modern times, the language has continued to evolve and is now used in a variety of fields, including education, technology, and politics.

The Tamil language has also played an important role in the development of other Dravidian languages, such as Telugu, Kannada, and Malayalam. These languages share many common features with Tamil, including grammar, vocabulary, and pronunciation, and are considered to be part of the Dravidian language family.

In conclusion, Tamil is one of the oldest datable languages in the world and has a rich cultural and historical heritage. Its roots can be traced back to the Sangam literature, and the language has continued to evolve and influence other Dravidian languages over the centuries. If you are interested in exploring the rich history and culture of South India, learning the Tamil language is a must.

தொலையும் நுண்ணுணர்வு : Reel and Real – ப்ரதீப்

0

ஆப்பிரிக்க பழங்குடி மக்களிடம் காலரா பற்றிய விழிப்புணர்வு திரைப்படம் காண்பிக்கப்பட்டபோது, அது என்னவென்றே தெரியாமல் விழித்தார்கள். அவர்கள் பார்க்கும் முதல் ஒளித்துணுக்கு அதுதான். திரையில் எதைப்பார்த்தீர்கள் என்று அவர்களிடம் வினவியபோது, யாரிடமும் பதிலில்லை. ஒருவர் மட்டும் கோழி ஓடுவதைப் பார்த்ததாகச் சொன்னார். படத்தை எடுத்தவருக்கே அதிர்ச்சி. இதென்னடா புதிதாகக் கோழி என்று. மீண்டும் படத்தை ஆராய்ந்தபோது, ஒரே ஒரு ஷாட்டில் ஓரத்தில் கோழி ஒன்று ஓடுவது தெரியவந்தது.

புலனறிவால் நம்மைச் சுற்றி இருப்பவற்றையே மனித மூளை அதிகமாக பதிவு செய்கிறது. பிற்பாடு ஊடகம் ஒன்றுடனான தொடர்புறுத்தலின்போது ஏற்கெனவே பதிவானவற்றில் உள்ள பொருள்களுடன்தான் முதலில் கவனம் குவிகிறது. ஒரு ஒளிக்காட்சியில் துல்லியமாக ஞாபகத்தில் தங்குவது ஏற்கெனவே நன்கு பழக்கமான வடிவங்கள்தாம். ஆப்ரிக்க பழங்குடிக்கு கோழி தென்பட்டது போல.

நாம் காண்பது அனைத்தும் நம் பிரக்ஞையால் அளக்கப்பட்டதன் மாதிரி வடிவங்களே; உண்மையான ஒன்றை அல்ல என்று இம்மானுவேல் காண்ட் சொல்வார். அதாவது நாம் காணும் மரம் இப்படி இருக்கிறது என்று நம் பிரக்ஞை அதற்கொரு வடிவத்தைச் சூட்டி அளிக்கிறது. அதையே நாம் அறிகிறோம். ஆனால் பருவெளியில் உண்மையான அதன் இருப்பு நம் அறிவால் அளக்க முடிந்தது அல்ல. நமக்கு மரமெனத் தெரியும் உரு யானைக்கு வேறு ரூபம் கொண்டது. எறும்புக்கு இன்னும் வேறானது. அத்வைதம் சொல்லும் மாயை என்ற கருத்தாக்கமும் இதுவும் ஏறக்குறைய ஒன்றுதான்.

வட்டம், சதுரம், செவ்வகம், முக்கோணம் என்று பொருத்தமான வடிவங்களை மனித மூளைக் கண்டடைந்ததுகூட அசாத்தியமான சாதனையாகும். இவ்வடிவங்களில்தான் மனித வாழ்வு நிலைகொண்டிருக்கிறது. வீட்டை நாம் ஏன் அமீபா வடிவில் கட்டுவதில்லை? சதுர, செவ்வக வடிவமே வசதியானது என்பதை கண்டறிந்துவிட்டோம். வடிவியல் எனும் கணிதத்துறை அதி அற்புதமானது. கட்டடத்துறையில் மனிதன் அடைந்த சாதனைகள் அனைத்தும் அதனாலேயே சாத்தியமானது.

கதைகளைக்கேட்டு வளர்ந்த கடைசி தலைமுறை நமது. அன்றைக்கு ஒளிப்படம் என்றால் சினிமா மட்டுமே. பொதுவாக வாய்மொழியாகச் சொல்லுவதைவிடவும் காட்சி மொழியில் சொன்னால் அது மனித மூளையில் ஆழமாகப் பதியும்; கற்பனை வளம் பெருகும் என்பது அறிவியல்பூர்வ உண்மை. இந்தத் தலைமுறையில் குழந்தைகள் விடீயோக்களை கண்டே வளருகின்றன. அறிதல் வந்த உடனே அவர்களுக்கான டிவியும் செல்போனும் இணையமும் அறிமுகமாகிறது. அவர்களுக்கான காட்சித்துணுக்குகள் எல்லா இடங்களிலும் கொட்டிக்கிடக்கின்றன. பாடத்திட்டங்கள், கதைகள் உள்பட.

ஆக, காட்சிகளோடு அறிவை வளர்த்துக் கொண்ட இந்தத் தலைமுறை நம்மைவிடவும் கூடுதல் திறனுடனும் நுண்ணுணர்வோடும் உருவாகி வந்திருக்க வேண்டும். சூழலைப் பார்த்தால் அப்படித் தெரியவில்லை. ரீல்ஸ் என்ற பெயரில் பெண்கள் அழகையும் ஆண்கள் அசட்டு வீரத்தையும் முன்வைப்பதைத் தவிர்த்து ஒன்றையும் காணோம். அழகிற்கும் வீரத்திற்கும் சங்ககால மரபிலிருந்தே ஒரு தொடர்ச்சி இருக்கிறதென்று வைத்துக்கொள்வோம். இவை மானுடரின் இயல்பான வெளிப்பாட்டு உணர்ச்சிகள். இந்தத் தலைமுறையும் இவற்றை தொழில்நுட்பங்களின் உதவியோடு வெளிப்படுத்துகிறது என்று புரிந்துகொள்ளலாம்.

ஆனால் கலை, இலக்கியம், பண்பாடு, வரலாற்றுணர்ச்சி அற்ற கும்பலே இந்த தலைமுறையிலும் கூடுதலாக உருவாகிவருகிறது. வழக்கம்போல ஏதோ ஒன்றிரண்டு மட்டும் தப்பிப்பிழைக்கிறது. புத்தக விற்பனையும் கலை, கலாச்சார நிகழ்வுக்கு வரும் கூட்டமும் இதற்கெல்லாம் சான்று. ஆக, நாம் தொழில்நுட்ப உதவியோடு கூடிய தலைமுறை மாறுபாட்டைச் சரியான விதத்தில் கணிக்கவில்லை; பயன்படுத்தவில்லை. அல்லது அதில் ஏதோ போதாமை உள்ளது. கல்வித்துறையின் தோல்வி என்று இதை வகுக்கலாமா எனத்தெரியவில்லை. ஆனால், பேச்சு, வரி வடிவத்திலிருந்து மாறி காட்சி வடிவத்தில் கதை சொல்லத் தொடங்கிய இடத்தில் சர்வ நிச்சயமாக ஏதோ ஒன்றை நாம் தவறவிட்டுள்ளோம்.

நன்றி ப்ரதீப் Source

அடங்காத நாடோடி காற்றல்லவா !

0

நீங்கள் எப்போதாவது இப்படி நினைத்ததுண்டா? சின்ன வயதில் வாகனங்களை பார்க்கும்போது ஏதோ ஒன்றில் ஏறி அது எங்கே கடைசியாக செல்கின்றதோ  அங்கேயே  போக வேண்டும் என்றும்  , யாராவது கடத்திச்சென்று  ஊர் சுற்றவேண்டும் என்று, நடைபெறாத விடயம் என்றாலும் மனம் இப்படியெல்லாம் யோசிக்க தோன்றும் அல்லவா? பெரும்பாலும் அனைவரும் இப்படி ஏதாவது நினைத்திருக்கக்கூடும். ஏதோ ஒன்று நம்மை கட்டி வைத்திருக்கின்றது போலும் அதை நாம் மீறி செல்ல வேண்டும் என்றும்  நினைத்திருப்போம். இந்த முயற்சியின் பலனாகவே பயணம் நம் வாழ்க்கையில் ஒன்றோடு ஒன்றாக  பிணைந்து காணப்படுகின்றது. 

பயணம் எல்லோர் வாழ்க்கையிலும் ஏதோ ஒன்றை தேடி அலையவைத்து  கொண்டுதான் இருக்கின்றது. பயணம் என்பது ஒரு விடை தெரியா வினா . சில பேரிற்கு மிகவும் பிடித்த ஒன்று சில பேரிற்கோ  ஏனோ தானோ என்று மாறுபட்டு கொண்டிருக்கும் ஒன்று . சிறு வயதில் யன்னல் ஓரம் எட்டி பார்க்கும் சிறுவனின் உலகம் எப்படி இருக்கும் என்ற தேடல், மனதில் எதையோ ஒன்றை நினைத்துக்கொண்டிருக்கும் மனிதர்களின் தேடல், சிறுபிள்ளையின் அழுகையின் தேடல், சுதந்திரத்தை தேடும் ஒரு கூட்டுக்கிளியின் தேடல், வேலைக்கு சென்று பலகாலத்திற்கு பிறகு வீடு திரும்பும் தொழிலாளியின் தேடல், என எல்லா தேடலிலும் ஒரு பயணம் இருக்கும். தேடல் உள்ள உயிர்களிற்க்கு தினமும் பசி இருக்கும் என்று வைரமுத்துவின் வரிகள் மிக சிறப்பாக எடுத்துக்காட்டுகின்றது.

 ஒவ்வொரு பயணமும் ஒவ்வொருவருக்கும் புதுப்புது சுவாரஷ்யம் மிகுந்ததாகவும் பல நினைவுகள் ஊட்டுவதாகவும்  காணப்படும். சில பயணங்கள்  வினா தெரிந்து விடை அறியாதவையாகவும் சில பயணங்கள்  விடை தெரிந்து வினா அறியாதவையான புதிராகக் காணப்படும் . இது போன்ற பல சுவாரஷ்யம் மிக்க  ஒரு பயண தொகுப்பை எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தேசாந்திரி  நூல்  சிறப்பாக எடுத்து  கூறுகின்றது. தான் சிறுவனாக இருக்கும் போது யன்னல் வழியாக எட்டி எட்டிப் பார்த்த  உலகம்  வளர்ந்து வந்து வெளியே  சுற்றிப் பார்த்த உலகம் என்று  பல நினைவுப் படிகளினூடாக வெளிப்படுத்துகின்றார். 

“ தேசாந்திரி” என்பது பல இடங்களுக்குச்சென்று வாழ்பவன் (நாடோடி ) என்று கூறப்படுகின்றது. எஸ் ராமகிருஷ்ணன் அவரது  வாழ்கை தேடல்களில் கேள்வி எழுப்பிக்கொண்டு சென்ற பயணங்களின் நினைவுகள், அவரது பால்ய வயதில் பெரியவர்கள் சொன்னகதைகள், அவர் படித்த பாடநூலில்குறிப்பிட்ட சுவாரஷ்யமான இடங்கள் போன்றவற்றிற்கு சென்று தற்போதுள்ள நிலைகள் என்ன என்றும் அதில் தான் பெற்ற அனுபவங்கள்  அவற்றில்  சில நேரம் ஏற்பட்ட  விரக்தி நிலை என தனது கிறுக்கலின் மூலம் அவரின் ஆதங்கங்களையும்  கவலைகளையும்  வெளிப்படுத்தியிருக்கிறார். 

ஒவ்வொரு பயணத்தின் போதும் அவர் எவ்வாறு தனது பயணத்தை அனுபவித்துள்ளார்  என்பதையும் ,  ஒன்றுமில்லை என்று நாம் நினைக்கும் அனைத்து சிறு விடயத்தையும்கூட  எவ்வாறு  ரசித்துள்ளார் என்பதையும் அவரது எழுத்துருவில் சிறப்பாக காணமுடிகிறது. அவர் சென்ற இடங்களிற்கும் நாம் நேரில் சென்று பார்ப்பது போன்ற அனுபவம் அவரது தேசாந்திரி பதிப்பை வாசித்த போது  எனக்கு ஏற்பட்டது. 

சில பண்டைய காலத்து சிற்பங்கள், கட்டிடங்கள்  என்பன எவ்வாறு  நலிவுற்று கவனிப்பாரற்று காணப்படுகின்றது என்றும் ,  மேலைதேய மற்றும்  கீழைதேய  நாடுகளில்  பழைய இடங்களின்  பராமரிப்பு எவ்வாறு வேறுபடுகின்றது என்றும்  ஆங்காங்கே   அவரின் ஆதங்கம் வெளிப்படையாக தென்படுகின்றது. எந்த ஒன்றையுமே காதால் கேட்டு அதன் நிலையை  அறிய முடியாது,  அதனை நேரடியாக சென்று பார்வையிடுதலின் உணர்வுகள் எப்படியானது  என்பதை உணர்ந்து அந்த பயணங்களை  சுவாரஷ்யம் நிறைந்த ஒன்றாக மாற்றலாம் என்று அவர் அழகாக குறிப்பிட்டுள்ளார். 

இப்புத்தகம் வாசிக்கும்போது நானும் என் சிறுவயதில் இருந்த ஊரிற்கு சென்றிருந்தேன். அப்போதெல்லாம் ஒன்றுமே இல்லை என்று தோன்றிய ஊர் பலவருடகாலம் கழித்து  செல்லும் போது புதியதாகவே தோன்றியது . 

நான் சிறுவயதில் வசித்த வீடு , கல்வி கற்ற பாலர் பாடசாலை, ஓடி விளையாடிய வீதி, அண்ணாவுடன் சைக்கிள் பயணத்தில் காலை வண்டிச் சில்லிற்குள் விட்டு அழுத நினைவுகள், வீட்டிற்குத் தெரியாமல் நாய் குட்டியை வளர்த்த நினைவுகள்  என அந்த அந்த  இடங்களிற்கு செல்லும் போது மறக்கமுடியாத நினைவுகள் வெளியில் சொல்லி தெரிவிக்க முடியாத உணர்வாக காணப்பட்டது . 

எனது இப்பயணம் சுவாரஷ்யம் நிறைந்த  ஒன்றாக  இருந்ததற்கு  இந்த புத்தகமும்  ஒரு காரணம்.  இது போன்றதே  நம் வாழ்க்கைப் பயணமும் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் வேறு வேறான தேடல் நிறைந்த ஒன்றாகவே காணப்படும். அதை சுவாரஷ்யம் நிறைந்த ஒரு மறக்கமுடியாத பயணமாக மாற்றுவது  தத்தமது கைகளில் தான் உள்ளது. ஒரு கூட்டு கிளியை தூக்கி சென்று ஊர் சுற்றுவது போலவே  நானும்  சுற்றி திரிகின்றேன். கூட்டின் கதவுகள் திறப்பதற்கும் காலம் கிடக்கின்றது போலும். இருந்தாலும் இந்த சுற்றுதலிலும் பல சுவாரஷ்யம் ஒளிந்து தான்  இருக்கின்றது. 

நன்றி.

இயற்கை – மனித விரிசல் ஏன்? எதற்கு..?

0

மனிதர்கள் இயற்கையின் குழந்தை,உண்மையில் மனித இனம் இயற்கையை வெறுக்கின்றதா என ஆழமாக பார்த்தால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.ஆனால் மேலோட்டமாக இயற்கை மீதான வெறுப்பு மனித இனத்திற்கு உண்டு என்பதில் மாற்று கருத்தில்லை.

ஏன் வெறுப்பு..? சூழலில் காணப்படும் Eco system,உணவு சங்கிலி தொடக்கம் எல்லாமே இயற்கை மனிதனை தனது அமைப்பின் ஒரு அங்கத்தவராக மட்டும் பார்க்கின்றது.இப்படி மனித இனத்தை இயற்கை பத்தோடு பதினொன்றாக நடாத்துவது Ego system மனநிலையில் வாழ தொடங்கிய மனித இனத்திற்கு பிடிக்க வில்லை.humanity மனிதனுக்கு மட்டும் மனிதாபிமானம் பார்க்கும் இவர்களுக்கு அவை ஒத்துவராமல் ஒரு கட்டத்தில் இயற்கையை விட்டு ஒதுங்கி கொண்டனர்.

இயற்கை இரக்கம் பார்க்காது..அதற்கு அப்படி ஒன்று தேவையில்லை..தனது சமனிலையை பேண அது என்ன என்றாலும் செய்யும்..அதன் சமனிலையை குழப்பாமல் இருப்பதே/அதற்கான புரிந்துணர்வை வளர்த்து கொள்வதே இந்த பூமியின் அதிகபட்ச புத்தசாலிதனம்,இந்த புத்திசாலிதனம் இயற்கையுடன் இருக்கும் போது மட்டுமே கிடைக்கும், ஒரு சிறு ஆற்றின் நீர் பெருக்கு கோடிக்கணக்கான எறும்புகளை நொடி பொழுதில் கொன்றுவிடும்,அதற்கு எறும்புகளும் மனிதர்களும் ஒன்றுதான்.

மனித இனம் காடுகளில் இருந்தால் பாம்பு,நுளம்புகடியிலும் என பலவாறாக அழிந்து கொண்டிருக்கும்.ஆனால் இயற்கை Eco system நீங்கள் அங்கு வாழ உழைக்க தேவையில்லை.போட்டி இருக்காது,அவரவரவருக்கு என்று ஒரு அந்த இயங்கியல் சங்கிலியில் இடமிருக்கும்.அது உங்களை வாழ வைக்கும்.அதே போல தனக்கு ஏற்ப உள்ள எல்லாவற்றையும் ஆக்கி அழித்தும் கொள்ளும்.

ஆனால் Ego system மனித இனம் தன்னை இயற்கையில் இருந்து விடுவித்து சற்று விலகி கொண்டது.ஆனால் இங்கு இயற்கை போன்று வாழவைக்க யாரும் இல்லை.. மனிதர்கள் தாமாக உழைத்து தொடர்ச்சியாக ஏதோ ஒன்றை உருவாக்கி கொண்டே இருக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தவிர இங்குள்ள இதன் தொடர்ச்சியாக இயற்கையை பதிலாக செயற்கை முறை ஒன்றை மனித இனம் தமக்கு தாமே உருவாக்கி கொண்டது.

தனது ego மனநிலைக்கு ஏற்ப மேலே கீழே என்று ஒரு சிஸ்டம் உருவானது. ஆனால் இங்கும் மனிதர்களுக்கு நிகழ்வது என்னவோ அதே நிகழ்வுகள்தான்.மனித இனம் இங்கு உழைத்து உண்ண வேண்டும்,கட்டாய வேலை,கட்டாய படிப்பு கட்டாய ஊசி என்று சமூக சிறை வைக்கப்பட்டுள்ளது.ஆனாலும் அது அவற்றை ஏற்று கொள்கின்றது காரணம் இயற்கையை விட்டு செயற்கையை உருவாக்கி கொண்டதும் நாம்தான் என்று அதற்கு தெரியும்.

தனி மனித EGO எல்லாமே ஒன்று சேர்ந்து சிஸ்டத்தின் உச்சியில் மிகப்பெரிய MEGA EGO ஒன்றை உருவாக்கிவிட்டுள்ளது.அது இயற்கையை ஒத்த முற்று முழுதாக செயற்கை Artificial intelligence,Multi planatory living என்று ஏதோ எல்லாம் அடைய முயற்சி செய்வதாக கூறி கொள்கின்றனது.EGO மனித இனத்தின் மனம் இயற்கை மாறாக உருவாக்கி கொண்ட செயற்கை system மனிதர்களை இப்படி பாடாக படுத்துகின்றது.இங்கு ஆக்கம் இருக்குதோ இல்லையோ அழிவு தாராளமாக இருக்கின்றது!

மனித இனம் செயற்கைதனத்தில் நவீன விலங்குகளாக அவர்களை அறியாத அடிமைகளாகியுள்ளனர்.காட்டிலிருந்து தப்பி பாதுகாப்பாக நாட்டுக்கு வந்துவிட்டோம்,நாம் நாகரீம் அடைந்துவிட்டோம் என்று எல்லாம் மனித இனம் தன்னை பற்றி தானே பெருமை பேசி கொள்கிறது!

இக்கரைக்கு மாட்டுக்கு அக்கரை பச்சை போன்று இயற்கையில் இருக்கும் போது செயற்கை நன்றாக இருந்தது.சரி என்று செயற்கைக்கு வந்த மனித இனத்திற்கு இன்று இங்கிருந்து பார்க்க இயற்கை நன்றாக இருக்கின்றது.ஆனால் போக முடியவில்லை அதனால் எப்போது vacation வரும் என்று Calender ஐ பார்த்து கொண்டுள்ளது.

அடிப்படை மனசிறையில் மனித இனம் இயற்கையோ செயற்கையோ தனது முடிவை தானே எழுதி கொள்கின்றது.மற்றபடி இங்கு முற்று முழுதாக இருப்பது இயற்கை மட்டுமே,செயற்கை என்ற ஒன்றை மனிதனால் உருவாக்க முடியாது.அதாவது இயற்கைக்கு மாறான ஒன்றை இங்கு உருவாக்க இயலாது.இங்கு உருவாக்கி கொண்டிருப்பவை எல்லாம் இயற்கையின் இன்னொரு வடிவங்களே,அது இருமை இயல்புகளின் ஒன்றான அழிவை மனித இனத்திற்கு காட்டி திரும்ப தன்னை(இயற்கை) நோக்கி வர செய்வதற்காக கூட இருக்கலாம்.(reverse psychology) நாம் விளங்கி கொள்ள வேண்டியவை அதிகம்! அசலை விட போலியே பார்க்க அதிகம் நல்லாக தெரியும் என்பார்கள்.ஆனால் எமது பார்வை,பார்க்கும் விதம் சரியாக இருக்கும் போது நமக்கு சரியானது சரியானதாக தெரியும்.

நாம் சிறுவயது முதல் பின்தொடரும் கல்வி கொள்கைகள்,கற்கும் பாடங்கள் எமக்கு செயற்கை அறிவையே தருகின்றன.அவை எங்களை எல்லாவற்றையும் செயற்கையாக பார்க்கவே தூண்டும்,ஆக செயற்கையாக நடக்கும் எல்லாம் சரியாக தெரியும். ஆனால் இயற்கையான அறிவு எமக்குள் உண்டு.அதை வைத்து இயற்கையாகவும் நாம் பார்த்து கொள்ள வேண்டும்.இரண்டு விதமாகவும் பார்த்து கொள்ளும் போதே நமக்கு தெளிவு கிடைக்கும்!

பணத்தின் இயல்பும் இயங்கியலும்…

0

பணம் என்பது இன்றைய உலகின் இயங்கியலின் அடிப்படையாகி உள்ளது.மக்கள் தெரிந்தோ தெரியாமலோ அதை ஏற்று அதன் பின்னால் எங்கே பணம் பணம் என்று ஓடிகொண்டிருக்கின்றனர்.பூமியின் மனித வரலாறு உண்டான காலத்துடன் ஒப்பிடும் போது பணம் உண்டான காலம் மிக சிறியது இருந்த போதிலும் இந்த பணம் எப்படி இந்தளவுக்கு மனிதர்கள் வாழ்வில் நிலைபெற தொடங்கியது அதன் இயல்புகள் என்ன? பணத்தை எப்படி நாம் பார்க்கிறோம்? எப்படி பார்க்க வேண்டும் என்று சற்று விளக்கமாக ஆய்ந்தறிவோம்.

நீரானது உலகில் மொத்த மேற் பகுதியில் அதிகமான சதவீதத்தை தன்னுள் வைத்துள்ளது.நிலமானது பூமி எங்கும் மேற்பரப்பில் உள்ளது.நெருப்பானது பூமிக்கடியில் உட்கோள பகுதியில் எரிந்து கொண்டுள்ளது.காற்றானது வாயு மண்டலமாக பூமியை சுற்றி ஒரு படையாக உள்ளது.ஆகாயம் அதற்கு அடுத்து ஒரு படையாக ( layer ) ஆக உள்ளது.ஐம்பூதங்களும் இவ்வாறே பூமி என்ற ஒன்று உருவாகி இயக்கி கொண்டுள்ளது.

பூமியில் மனிதர்களால் செய்யப்படும் எல்லாமே இயற்கையில் இருந்து எடுத்து கொள்ளப்படுபவைதான்,இயற்கையின் இயல்புகள் அவற்றில் ஆழமாக காணப்படும்.பூமியில் பெருமளவு நீரானது உப்பாக கடலாக காணப்படுகின்றது,சிறிதளவு நீரே குடிக்க உகந்ததாக உள்ளது.அதே போல பணமும் சிறிதளவு பணமே பாவனைக்கு உகந்த அளவில் இருக்கும்.உப்பு கடல் நீர் மனிதர்களின் அடிப்படை தேவையான குடிப்பதற்கு உகந்தது அன்று! பணத்தின் பெரும்பான்மையும் அடிப்படை தேவையை பூர்த்தி செய்ய பயன்படாது,வேறு தேவைகளுக்காகவே உருவாக்கப்பட்டு பயன்படுகின்றது.

நீரானது நகர்ந்து சென்று கொண்டே இயற்கையை வளமாக்கி கொள்ளும்,ஓரிடத்தில் தேங்குவதால் நீர் அசுத்தமாகி அதன் இயல்பை இழந்துவிடும்.பணமும் அதே போல ஓடி கொண்டே இருக்கும் போதே அது தனது பெறுமதியை அதிகரித்து கொள்ளும்,ஒரே இடத்தில் ஆங்காங்கே குவியும் போது பணம் தீமையாகி அதன் இயல்பை இழந்து விடுகின்றது.அதனால் தீமைகளே விளையும்.

பணத்தை நீர் போல ஓட விடுவது அதாவது முதலீடுகளில் இட்டு தொடர்ந்து பணத்தை ஓட வைத்து கொள்பவர்களை நோக்கியே பெருமளவு பணம் ஈர்க்கப்படுகின்றது.அவர்களே பெரிய செல்வந்தர்களாகிறார்கள்.அவர்களை நோக்கி பணம் நீர் போல நகர்ந்து வரும்.இன்றைய உலகில் பெரிய செல்வந்தர்கள் எல்லோருமே பணத்தை நகர்ந்து செல்லும் நீரை போன்று செல்லும் பணத்தால் பெரும் பணக்காரன் ஆனவர்கள்,அதாவது நகர்ந்து செல்லும் நீரை சரியாக கையளா தெரிந்து கொண்டவர்கள்.

இதற்கு மாறாக பணத்தை சேமித்து வைக்க வேண்டும் என நினைப்பவர்களை நோக்கி பணம் வருவதில்லை,அப்படி வரும் பணமும் தன் இயல்பை இழந்து தானும் கெட்டும் அவர்களை கெடுத்துவிடும். இயற்கையில் எதுவும் தன் இயல்பை இழக்க விரும்புவதில்லை,தங்களை ஒத்த இயல்புகளை நோக்கியே கவரும் நகர்ந்து கொண்டே இருக்கும்.இவர்கள் இருக்கும் செல்வத்தையும் இழந்து கொள்கிறார்கள்.

அதே போல பெரும் தவறான அதிர்வுகளால் கிளர்ந்து எழும் பண அலைகள் சுனாமி போன்று நாடுகளை துவம்சம் செய்து மூழ்கடித்துவிடும்.சுனாமியை எதிர்க்க முடியாது? ஓடி தப்புவதான் தப்புவதற்கு ஒரே வழி! ஆழமான கடல் எவ்வாறு அமைதியாக இருக்குமோ அதே போல் பணத்தின் ஆழம் அதிகமாக அமைதி தரும்.இரைச்சலை ஏற்படுத்தி பணம் பற்றிய பயத்துடன் இருப்பவர்கள் கரைகளில் நின்று அலைகளிடம் அடி வாங்கி கொண்டிருப்பார்கள்,கடலின் மிகபெரிய எதிர்மறையான சுனாமி,ஆழம் குறைந்த கடலிலேயே பாதிப்பை உண்டு பண்ணும்.ஆழமான கடலில் சுனாமி அலை நகர்வதே தெரியாமல் இருக்கும்.அதாவது பணத்தின் ஆழம் அறிந்தவர்களுக்கு அங்கு நிற்பவர்களுக்கு அதனால் ஆபத்து இல்லை. ஆழத்தை பார்த்து பயந்து கரையில் நிற்பவர்களுக்குதான் ஆபத்து.

பெரும் செல்வந்தர்கள் பணத்தை பற்றி பெரிதாக அலட்டிகொள்வதில்லை.பணத்தின் இயல்பிலேயே அதனை எடுத்து கொள்வார்கள்,ஆனால் மற்றவர்கள் பணத்தை புனிதபடுத்தி பயந்து கொள்வார்கள்! அது அவர்களது பலவீனத்தையும் அவர்கள் ஆழ கடலில் போக பயந்து கரையில் நிற்பதால் ஓய்வே இல்லாத அலைகளை தமது வாழ்வில் ஒவ்வொரு கணமும் எதிர்கொள்கிறார்கள்.அது அவர்கள் வாழ்வில் அமைதியீனத்தை ஏற்படுத்தி கொண்டு இருக்கும்.

இயற்கையை இயக்கும் நீரை இயக்குவதில் நிலம் நெருப்பு ஆகாயம் காற்று என்பன காரணிகளாகவும் இருக்கின்றன.உயர்வான நிலபகுதியில் இருந்து தாழ்வான நிலபகுதி நோக்கி நீர் பாயும்.அதே போன்று நெருப்பு நீரை எரித்து ஆவியாக்கி உலகெங்கும் நகர்த்தி செல்லும்.காற்றும் ஆகாய அதிர்வுகளும் நீரை நகர்த்தி செல்வதில் தமக்குரிய பங்குகளை வகிக்கின்றன.பணம் காற்று போல பறக்கும்,நெருப்பை போல எரிக்கும்,ஆகாயம் போல அந்தரத்தில் தொங்கும்,தொங்க விடும்.எல்லாவிதமான ஐம்பூத இயல்புகளையும் பணம் தன்னகத்தே கொண்டுள்ளதால்தான் அது ஒரு பெரிய சக்தியாக இருக்கின்றது.

இந்த பூமியும் சரி மனித உடலும் சரி நீர் நிலம் காற்று நெருப்பு ஆகாயம் என ஐம்பூதங்களினால் ஆனது.இங்கு நமக்கு தெரியும் எல்லாவற்றிலும் ஐம்பூத இயல்புகள் உண்டு,நமது அறிவை வைத்து அதன் இயல்புகளை தெரிந்து கொள்ளும் போது எமது வாழ்க்கை வாழ இலகுவாகின்றது.

நியூயோர்க்கில் வென்ற தமிழரும் யாழ்ப்பாண சமூகமும்!

0

தனது திறமையால் நியூயோர்க் மக்களை திரும்பி பார்க்க வைத்த யாழ்ப்பாண தமிழர்!

18 ஆண்டுகளாக நியூயோர்க் நகர மக்களின் கவனத்தை யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழர் ஒருவர் ஈர்த்துள்ளார்.நியூயோர்க்கில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழரின் தோசைக்கடை அந்நாட்டு மக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வருடாந்த போட்டியில் விருது

இலங்கை தமிழரான திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடையே இவ்வாறு பிரபல்யமடைந்துள்ளது.அதுமட்டுமன்றி 2007ஆம் ஆண்டில், சிறந்த தெரு உணவு விற்பனையாளருக்கான நியூயோர்க்கின் வருடாந்த போட்டியின் வெண்டி விருதை திருக்குமார் கந்தசாமி வென்றுள்ளார்.மேலும் திருக்குமார் கந்தசாமியின் தோசைக்கடை குறித்த விபரங்கள் 42 புத்தகங்களில் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையின் சிறப்பம்சம

நியூயோர்க் இரட்டைக் கோபுரம் அருகே கிறிஸ்டோபர் தெருவில் திருக்குமார் கந்தசாமியின் தோசை கடை காணப்படுவதாகவும் இவரின் கடையில் விதம் விதமான தோசைகள் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தோசையுடன் சாப்பிடுவதற்கு தேவையான சட்னி, சாம்பார், இட்லி பொடி என அனைத்தையும் வீட்டில் இவரே தயாரித்து எடுத்துவருவதால் சுவையும் அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்லும் இடமென்பதால் இவருக்கு எல்லா நாடுகளிலிருந்தும் பாராட்டுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.

திருக்குமார் கந்தசாமி, உலகின் பல நாட்டு மக்களும் வசிக்கும் நியூயோர்க்கில் அமெரிக்கன், மெக்ஸிகன், ஐரோப்பியன், ஆப்கன் ஸ்ட்ரீட் ஃபுட்களுக்கு மத்தியில் நம் ஊர் தோசையையும் போட்டிபோட வைத்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.

இதே கந்தசாமி ஊரில் இந்த கடையை போட்டிருந்தால் எப்பவோ மூடிட்டு போக வேண்டிய நிலையே 90% வீதம் அவருக்கு ஏற்பட்டிருக்கும்..அவர் எங்கு இருந்தாலும் அதே தோசையைதான் போட்டிருப்பார்,ஊரில் அவ்வாறு ஒரு கடையை அவரால் போட்டிருக்க முடியாது,போட்டிருந்தாலும் தொடர்ந்து கொண்டு நடாத்தவும் முடியாது,ஆனால் அதே ஊர் இன்று நியூயோர்க்கில் புகழ் பெற்றதும் அவரை பாராட்டுகின்றது..

ஒருவருக்கு திறமை மட்டும் போதாது,அந்த திறமையை தொடர்ந்து வளர்த்து அதனை ஏற்று கொள்ளும் சமூக சூழலும் இருக்க வேண்டும்.சமூகமா தனி மனிதர்களா என்று பார்த்தால்,எவ்வளவு பலமான திறமையான தனி மனிதர்களையும் பலவீன சமூகம் வென்று விடுகின்றது.இவருக்கு இதுதான் நடந்திருக்கின்றது.இவர் தனது திறமையை ஏற்று கொள்ளுகிற இடத்தில் அதனை செய்து காட்டியிருக்கார்..திறமை ஏற்று கொள்ளப்படும் போது தனி மனிதர்களுக்கு கிடைக்கும் உந்தம்,மிக பெரிய சாதனைகளை செய்ய அவர்களை தூண்டும்.

மாறாக பலவீனமான சமூகம் திறமைகளை ஏற்று கொள்ளாமல் தனி மனிதர்களின் திறமைகளை மழுங்கடித்து தன்னையும் அழித்து கொள்ளும்.திறமையான தனி மனிதர்கள் தம் திறமைகளுக்கு அங்கீகாரம் கிடைக்கும் இடங்களுக்கு சென்று வெற்றியை பெற்றால்,அந்த வெற்றியை தனது சமூக வெற்றியாக கொண்டாடி கொள்ளும்.குறித்த தமிழர் தனி நபராக வெற்றி பெற்றிருக்கின்றார்,அவரை பெற்றி பெற வைத்தது நியூயோர்க் மற்றும் அங்கு வரும் சமூகம் மட்டுமே..

இதில் தமிழ் சமூகமாக கொண்டாட ஒன்றுமேயில்லை..

உணவு – சமூக இயங்கியல் பாகம் I

0

இன்றைய காலங்களில் சமையல் என்பது சில குறிப்பிட்ட இயந்திரங்களை முடுக்கி விடுவதன் மூலம் சில நிமிடங்களில் தயாராகி விடுகின்றன.இல்லையெனில் சாப்பாட்டு கடைகளில் சென்று அதே போல் இயந்திர கதியில் தயாரிக்கப்பட்டவற்றை வேகமாக சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலைக்கு ஓடி விடுகிறார்கள் மக்கள்..

வீட்டில் என்றாலும் வேலை செய்யும் மனைவி வேகமாக வேகமாக ஏற்கனவே குளிர்சாதன பெட்டியில் வைத்ததை எடுத்து வேக வைத்து அல்லது சிறு சமையலை வேக வேகமாக செய்து சாப்பிட்டுவிட்டு பார்சலும் கட்டி கொண்டு சென்று சாப்பிடுவதாக கழிகின்றது…

இதனையும் தாண்டி வீட்டில் சமைக்கும் பெண்களும் டீவி,யூடிப் நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டு சமைப்பது என மனிதர்களின் அடிப்படை தேவையும் பிரதான சக்தி மூலமுமான உணவு இன்று இவ்வாறு அதன் உயிரோட்டத்தை இழந்து வருகின்றமைக்கு மேற்குறிப்பிட்ட சமையல் முறைகளும் அதனுடன் சம்பந்தபட்டவர்களின் அணுகுமுறைகளுமே காரணம்!

சமையல் உணவு – எப்படி என்ன செய்ய வேண்டும்..?

உணவை நாம் எமது கையால் எவ்வளவுக்கு எவ்வளவு தயாரிக்கின்றமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை அதிக உயிரோட்டமாகின்றன.சமையலுக்கு தேவையான விறகுகளை அழகாக கொத்தி வைக்கின்றீர்கள்,அடுப்பில் விறகுகளை வைத்து தீ மூட்டுகின்றீர்கள்,சமையலுக்கு தேவையானதை ஒவ்வொன்றாக ஓரிடத்தில் ஆர அமர்ந்து செய்ய வேண்டும்.சமையலில் போதுமான முயற்சியும் நேரமும் கொடுக்கும் போதே அவை அதிக உயிரோட்டம் பெறுகின்றன.இத்தகைய முயற்சியை நாம் துறந்து இயந்திரமான சமையலை செய்வதால் வாழ்வின் சமையல் உணவால் கிடைக்கும் இன்பங்களை இழக்கிறோம்,அந்த உயிரோட்டத்தை தவறவிடுகிறோம்… அடிப்படை இயக்கும் சக்தியான உணவு சீர்கெடும் போதும் அங்கே மொத்த இயக்கமும் சீர்கெடுகின்றது.

உலகில் நம்மை சுற்றி நடப்பவற்றில் நாம் எவ்வளவுக்கு எவ்வளவு நேரம் கொடுக்கிறமோ அவ்வளவுக்கு அவ்வளவு அவை உயிரோட்டமாக இருக்கும்.

எங்கே எப்படி ஆரம்பிப்பது..?

உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்து உங்கள் வாழ்க்கையை சரி பண்ண தொடங்குங்கள்.அதுதான் சரியாக இருக்கும்.சமையல் அறை விறகில் சமைக்க கூடியதாக முடிந்தவரை மரபு கட்டிட முறையில் கட்டி கொள்ளுங்கள்,இல்லையென்றால் இடித்து கட்டி கொள்ளுங்கள்.நின்ற நிலையில் அவசரமாக சமையல் செய்யும் இன்றைய சமையல் அறை உள்கட்டுமானங்களை முழுமையாக தவிர்த்துவிடுங்கள்,

மனிதர்களின் அசெளகரியத்தின் மறுபக்கத்தில்தான் மகிழ்ச்சியும் அபரிமிதமான வாழ்வும் இருக்கின்றது.

இருந்த நிலையில் விறகால் சமைக்க கூடியவாறு சமையலறையை வடிவமைத்து கொள்ளுங்கள்..காற்றோட்டமாக மேற்கூரை சற்று உயரமாக,போதிய இடவசதி கொண்ட மண்ணாலான/மண் டைல்ஸ் [Brick mud tiles] சமையல் உபகரணங்களை முடிந்தளவு மண் சட்டிகள்,ஓலை பெட்டிகள் என இயற்கையாக வைத்து கொள்ளுங்கள்.. அவற்றை வீட்டில் நீங்களாக செய்து கொள்ளுங்கள் [10 வருடங்கள் முன்னர் வரை எம் பாட்டிகள் அவற்றை தாங்களே செய்து வந்தனர்]

சமையல் செய்யும் உணவுகள் முடிந்தவரை சிறுதானிய உணவுகள்,உங்கள் மண்ணில் சொந்தமாக இயற்கையாக விளைவித்த மரக்கறிகள் எனவும் செயற்கை சுவையூட்டிகள் பாவனையற்றதாகவும் பார்த்து கொள்ளவேண்டும்.

இவ்வாறாக சரியாக சமையலறையை உருவாக்க தெரிந்து பெண்கள் சமையலை சரியாக செய்வார்கள்,குடும்ப நன்மை,அதனூடாக சமூக நன்மை,உலக நன்மைகளை மனதில் வைத்து உணவு ஊடாக அவரவர் குடும்பங்களுக்குரிய சக்தி செலுத்தப்பட்டு கொண்டிருக்கும்,பல குடும்பங்கள் இணைந்து சமூகமும் பல சமூகங்கள் சேர்ந்து நாடும் பல நாடுகள் சேர்ந்து உலகமும் சரியாக இயங்கி கொள்ளும்.இவ்வாறாக மொத்த உலகத்துக்குரிய இயங்கியல் சமையலறை,உணவு,அதாவது ஒரு இலட்சிய பெண்ணிலிருந்தே பிறக்கின்றது…

இதனை தவிர்த்து.. வேகமான நவீன சமையல்களும்,கவன குறைவான சமையல்களும் இயந்திரதனமாக சக்தியை மனிதர்களுக்கு கடத்தி விடுகின்றன.இந்த சக்தியை பெற்று கொள்ளும் குடும்ப சமூக மனிதர்கள்,இயந்திரங்கள் போன்ற குடும்ப,சமூக உலக வாழ்வினுள் கட்டுபட்டு கிடப்பார்கள்.அங்கு உயிரோட்டம் கேள்விகுறியாகி விடுகின்றது.இதற்காக சொல்லப்படுகின்ற காரணங்கள் மிகவும் அற்பமானவை… உயிரோட்டத்தை இல்லாத வாழ்வு அர்த்தமற்றது..இதனை கட்டமைக்கும் பொறுப்பு சமையலறையில் இருந்து ஆரம்பிக்கப்பட வேண்டும்.மனிதர்களுக்கு உயிரை கொடுத்து படைக்கும் இலட்சிய பெண்களால்தான் இது முடியும்!

தொடரும்…

வீடு கட்டுதல் – ஒரு மெய்யியல் பார்வை

0

மனித இனம் உலகில் நிலைபெற அதன் உடல்,மன பாதுகாப்பு நிலைபெறுதல் போன்ற கேள்விகளுக்கான பதிலாக வீட்டை உருவாக்கி கொண்டது.சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்ப அவற்றில் இருக்கின்றன பொருட்களை பயன்படுத்தி, தாமாக தமக்கு ஏற்ற வீடுகளை உருவாக்கி கொண்டனர்.

மனித இனம் பெருக பெருக உலகத்துடனான தொடர்புகள் பெருக,வியாபாரம் பெருக… இவற்றில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டன.ஆரம்ப காலங்களில் மனிதன் அறியாமலேயே சூழலில் இருந்த,கிடைத்த பொருட்களை வைத்தே வீட்டை உருவாக்கி கொண்டான்.இது சூழலுக்கு உகந்ததாக இருந்தது.ஆனாலும் பின்னராக உலக வரலாற்று,சமூக மாற்றங்களினால் சிறை வைக்கப்பட்ட மனித மனத்தை பயம் ஆட்கொண்டது.

அடிப்படை தேவையான வீடு பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம்,அப்படி மனித மனங்கள் நினைப்பதில் தவறில்லை.ஆனால் அவை மனிதர்களை அவர்களே சிறை வைக்குமளவுக்கு அவர்களுக்கு எதிராகவே பயன்படகூடாது.இதற்கு உண்மையில் பாதுகாப்பு என்றால் என்ன என்று தெரிய வேண்டும்..? சூழலை அழித்து,மாற்றங்களை உண்டு செய்தி சமநிலையை குழப்பும் வகையில் நாம் வீட்டு கட்டுவது ஒருநாளும் நமக்கு பாதுகாப்பாக அமையாது.

எங்கே நாம் பிழை விடுகிறோம்? நாம் கட்டும் வீடு நிறைய காலம் இருக்க வேண்டும் என்று நினைப்பதுவே முதல் பிழை! உதாரணமாக வீடு நிறைய காலம் இருக்க வேண்டுமென்று நினைத்து நாம் பாவிக்கும் சூழலுக்கு ஒவ்வாத சிமெந்து கலவைகள் மற்றும் இதர நவீன கட்டிட நிர்மாண பொருட்கள் ஒவ்வொன்றுமே சூழல் சமனிலையை குழப்பி விடுகின்றன.அவை வீட்டின் ஆயுள் காலத்தை சற்று அதிகரிக்கலாம்.

ஆனால் மனிதர்களின் ஆயுட்காலத்தை குறைத்துவிடும்,சூழலை எம்மால் தனியாக அழிக்க முடியாது ஆனால் நாம் ஒவ்வொருவரும் தனிதனியாக சூழல் சமனிலையை குழப்பும் போது அது எல்லாம் ஒன்று சேர்ந்து மிகபெரிய ஒரு சமனிலை குழப்பத்தை சூழலுக்கு/இயற்கைக்கு ஏற்படுத்தும்.அந்த குழப்பத்தை மீண்டும் சூழல் சமனிலைபடுத்தும் போது உருவாகும் விளைவுகள் மனித இனத்துக்கு தீங்காக தெரிகின்றன.ஆனால் அவை சூழலுக்கு/இயற்கைக்கு நல்லவை.

உலகம் ஒரு அற்புதமான பஞ்சபூத கலவை,நிலம் நீர் காற்று ஆகாயம், நெருப்பு என அதன் விஞ்ஞானம் மனித இனத்தால்,அறிவியலால் முழுமையாக புரிந்து கொள்ளப்படகூடியது அல்லது.ஆனால் இயற்கையுடன் நாம் ஒன்றிணைந்து வாழும் போது நமக்கு அவை புரிந்துகொள்ளப்பட்ட வேண்டிய தேவை ஏற்படாது.இயற்கையை விட்டு விலகும் போதே நமக்கு அவற்றை புரிந்து கொள்ளவேண்டிய தேவை ஏற்படுகின்றது,காரணம் இயற்கையை பார்த்து அதிலிருந்து பிரதியெடுத்து தற்காலிகமாக செயற்கையை உருவாக்கி கொள்கிறோம்.அதனை நாம் நமது ego மொத்த வெளிபாடாக மனித இனம் பார்க்கின்றது.இயற்கையை தாண்டி எம்மாலும் செய்ய முடியும் என்று சவால்விடுகின்றது.

இதிலும் இயற்கையே தன்னை குறிப்பிட்ட காலத்தின்/யுகங்களின் பின்னர் மனித இனத்துக்கு வெளிப்படுத்தி செயற்கையை படைக்க மனிதனுக்கு உதவுகின்றது.காரணம் இருக்கலாம் அது தன்னை புதுபிக்க/(அழித்தல் மூலம்) மனித இனத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதியை பயன்படுத்தலாம்.ஆனாலும் மனிதர்களை வேர்களை/அடிப்படைகளை இயற்கை எப்போது தனது காலுக்கடியிலேயே வைத்து கொண்டுள்ளது.நாம் இயற்கை என்பது பொன் முட்டை இடும் வாத்து என்றால் சில முட்டை கள் வந்ததும் வாத்தை கைவிடுவது புத்திசாலிதனம் இல்லை.

பிரபஞ்சத்தில் எங்கு எப்படி உருவானோம்,எங்கோ போய்கொண்டிருக்கிறோம்,பூமி பந்தில் தனித்து விடப்பட்டுள்ளோமா என்று எத்தனையை ஏக்கங்களை வைத்து கொண்டே நவீன அறிவியல் தட்டுதடுமாறி பயணிக்கின்றது.அறிவியல் தட்டுதடுமாற காரணம் அது முழுமையானது இல்லை என்பதே,அதனாலேயே அது மாறிகொண்டே இருக்கின்றது.ஆனால் முழுமையான இயற்கை மாறாமல் அமைதியாக இயங்கி கொண்டுள்ளது. அறிவியல் இரைச்சல்களில் சிக்கி சீரழியாமல் இயற்கையின் அமைதியை உணர்வதே இருக்கும் ஒரே வழி! இரைச்சல்களை கேட்டு பழகிய மனித இனத்திற்கு அமைதியை கேட்க முடியாது உணர மட்டுமே முடியும் என்ற உண்மை புரியவே இன்னும் சில வருடங்கள் தேவைப்படலாம்.

தொழில் மேன்மைக்கான வழிகாட்டி பகுதி I

0

உங்கள் வேலையை செய்யுங்கள்,செவ்வனே செய்யுங்கள்.சிறியதோ பெரியதோ சரியாக செய்யப்படும் வேலைகளே உலகில் உன்னதமானது.நீங்கள் மேசை துடைப்பவராக இருந்தாலும் சீரான கவன குவிப்பு,ஒழுக்கத்தின் மூலம் அந்த வேலையை உலக தரத்தில் உங்களால் செய்ய முடியும்.

மனிதர்கள் வேலை குறித்து சலிப்பு அடைவதை தாண்டி அவற்றை இன்னும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று கவனம் செலுத்துவதே அவர்களின் வாழ்க்கை அடுத்த கட்டத்தை நோக்கி வளர செய்வதற்கான செயன்முறையாகும்.

என்ன வேலை செய்கிறோம்,அது உலகத்தோரால் எப்படி பார்க்கப்படுகின்றது என்பதை எல்லாம் கவலைப்படாமல் அவற்றில் கவனத்தை குவிக்காமல்,முழு கவனத்தையும் நீங்கள் செய்யும் வேலையின் நிகழ்கணத்தில் குவியுங்கள்.நீங்கள் செய்யும் வேலை மேம்படும்,அது துப்பரவு தொழிலாளியோ அல்லது ஜனாதிபதி வேலையோ எதுவாகினும் வேலை என்ன என்பதிலோ அதை யார் செய்கிறார்களோ என்பதில் எதுவும் இல்லை.அந்த வேலை எப்படி செய்யப்படுகின்றது என்பதை வைத்தே அளவிடப்படுகின்றது.

உங்களின் சிறிய கடையை நீங்கள் ஒரு அரசு நாட்டை நிர்வகிப்பதை விட,ஒரு பெரிய கம்பனி முதலாளியை சிறப்பாக கூட நிர்வகித்து கொள்ளலாம்.சீரான ஒழுக்கம்,கவன குவிப்பு மூலம் இவற்றை நீங்கள் இப்போது இருக்கிற இடத்தில் செய்கிற வேலையில் இருந்தே இக்கணத்திலேயே அடைந்து கொள்ளலாம்.அப்படி உங்களை நீங்கள் வளப்படுத்தி கொள்ளும் போது உங்கள் தோரணை உங்களை அறியாமலேயே ஒரு நாட்டு அதிபர் அளவுக்கு மாறி போயிருக்கும்.நீங்கள் அதற்கு தகுதியானவர்தான்.

முன்னாள் அமெரிக்க அதிபர் ஜேம்ஸ் கார்பீல்டு கல்லூரியில் படிக்கும் காலத்தில் தமது படிப்பு செலவை கல்லூரி ஏற்கும் என்றால் கல்லூரி துப்பரவு தொழிலாளியாக பணிபுரிய தயாராக இருப்பதாக கூறி அந்த வேலையை செய்தார். பின்னர் மாணவர் ஒன்றிய தலைவராகி நாட்டுக்கே அதிபர் ஆனார்.

அவர் துப்பரவு செய்த வேலையும் ஏதோ வந்துவிட்டோம் என்று வேலை செய்யும் ஒரு புலம்பெயர்ந்த தமிழரோ,ஆபிரிக்கரோ,அயல் தேசத்து இளைஞரோ செய்யும் வேலையும் ஒன்றா..? வேலை ஒன்றுதான் ஆனால் அந்த வேலையை செய்த விதம் வேறு! அவர் அமெரிக்க ஜனாதிபதி ஆன பிறகு உலகிற்கு தெரிந்த அவரின் திறமைகள்,அவர் துப்பரவு தொழிலாளியாக இருந்த போது கற்றவையும் சேர்த்துதான்.அவர் அப்போதே அமெரிக்க ஜனாதிபதி மேசை துடைப்பது போலவே உணவக மேசைகளை துடைத்து வந்தார்.

இங்கு கூலி தொழிலோ அமெரிக்க நாட்டு ஜனாதிபதி தொழிலோ செய்யப்பட்ட வேண்டிய விதம் ஒன்றுதான்..அந்த விதத்தில் அவரவர் வேலையை செய்வதன் மூலம் கூலி தொழிலாளியும் அமெரிக்க அதிபராக முடியும்.

என்ன செய்கிறோம் என்பதை விடுத்து செய்யும் வேலை எதுவாகிலும் அதன் மீது நிகழ்கணத்தில் கவனத்தை குவித்து ஒரு ஒழுக்கத்துடன் செய்து வரும் போது அது உங்களை உங்கள் வாழ்க்கையை உயர்த்துகின்றது.அதற்காக எல்லோரையும் நாட்டு அதிபராகுமாறு சொல்லவில்லை.உங்களுக்கு நீங்கள் ராஜாவாக இருந்து கொள்ளுங்கள்.. இதன் மூலம் இருப்பதில் பெரிய இடத்தையும் கீழே உள்ள துப்பரவு தொழிலையும் ஒப்பிட்டு செய்யும் முறையில் அவை எல்லாமே ஒன்றுதான் என்று கூறுகிறோம்.

துப்பரவு தொழிலாளியிலிருந்து நாட்டு அதிபர் ஆவது அப்படி வந்தவர்களை தவிர அனைவருக்கும் அதிசயமாக தெரியும் ஆனால் அப்படி வந்தவர்களுக்கு அது அதிசயமில்லை,துப்பரவு தொழிலோ/நாட்டு அதிபர் வேலையோ அவர்களுக்கு ஒன்றுதான்.எந்த வேலையாக இருந்தாலும் நிகழ்கணத்தில் ஒழுக்கத்துடன் ஒருமித்த கவனம் செலுத்துகிறார்கள்.அவர்கள் அவ்வளவுதான் செய்கிறார்கள். இரண்டையுமே சரியாக செய்யாதுவிடின் அந்த இடத்தில் இருப்பவர்கள் மூக்கை பொத்தி கொண்டுதான் இருக்க வேண்டும்.

நீங்கள் எந்த வேலை செய்தாலும் அதில் சம்பந்தப்படும் நீங்களும் அந்த வேலை எவ்வாறு செய்யப்படுகின்றது என்பதுதான் முக்கியமானது..கவனத்தை அதில் குவிக்க தொடங்குங்கள்…