Tuesday, May 5, 2026
No menu items!
Home Blog Page 65

பிரான்ஸ்: காதலன் செய்த வேலை! படுக்கையிலே உயிர் துறந்த பெண்!

0

பிரான்ஸின் Champigny-sur-Marne பகுதியில் மிகக் கொடூரமான கொலைச்சம்பவம் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெற்றுள்ளது. இதில், 42 வயதான பெண் பெரின் (Perrine) தனது வீட்டில், அவர் தினமும் உறங்கும் படுக்கையிலேயே சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இச்சம்பவம், அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலையுடன் தொடர்புடையதாக குற்றம்சாட்டப்பட்டுள்ள பெரினின் கணவராகக் கூறப்படும் ஜிம்மி (Jimmy), வயது 38. சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டு தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணியளவில், ஜிம்மியின் தந்தை, பெரினை எழுப்புவதற்காக வீட்டிற்குள் சென்றுள்ளார். ஆனால், பெரின் படுக்கையில் சுயநினைவின்றி தூங்குகிறார் என நினைத்த அவர், நெருங்கிச் சென்ற போது பெரின் அசைவின்றி கிடப்பதை பார்த்து கடும் அதிர்ச்சியடைந்தார். உடனே, அவர் மருத்துவ உதவியை நாடி அவசர மருத்துவ குழுவினரை அழைத்துள்ளார். மருத்துவக் குழுவினர் வந்து பரிசோதனை செய்த போது, பெரின் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்பதைக் கண்டறிந்தனர்.

பின்னர், பரிசோதனைக்காக பெரினின் உடல் மருத்துவ நிபுணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பிரேதப் பரிசோதனையில் பெரினின் தலையில் ஏற்பட்டுள்ள கடுமையான காயமே அவரது மரணத்துக்குக் காரணம் என்று தெரியவந்தது. மேலும், முகப்பகுதியில் பலத்த அடிகளும் இருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.

ஜிம்மி, பெரினின் மரணத்திற்கு பிறகு தப்பிச் செல்ல முயற்சி செய்ததாகத் தகவல் கிடைத்துள்ளது. ஆனால், Champigny-sur-Marne காவல் துறையினர் அதே தின இரவில், மதுபோதையில் இருந்த ஜிம்மியை கைது செய்தனர். அதன் பின், அவரை குற்றப்புலனாய்வு பிரிவிற்கு ஒப்படைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, பெரினின் முகத்தில் காலால் அடித்ததாக ஜிம்மி ஒப்புக்கொண்டுள்ளார். இது, அவரது செயலில் இருந்து கொலையை உறுதி செய்யும் முக்கிய ஆதாரமாக அமைந்துள்ளது.

இந்தச் சம்பவம் தற்காலிக கோபத்தினாலா அல்லது குடும்பத் தகராறினாலா ஏற்பட்டது என்பதைப் பற்றி தற்போது போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கு முன்னர் ஜிம்மிக்கும் பெரினுக்கும் இடையில் ஏற்பட்ட பிணக்குகள், வன்முறை சம்பவங்கள் குறித்து அருகிலுள்ள உறவினர்களிடமும் நண்பர்களிடமும் விசாரிக்கப்படுகின்றது.

இந்த கொடூரமான கொலை சம்பவம் பிரான்ஸ் மக்களிடையே பெரும் கலக்கம் மற்றும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. காதல் என்பது நம்பிக்கையும் பரஸ்பர புரிந்துணர்வையும் அடிப்படையாகக் கொண்ட பந்தமாக இருக்கவேண்டும் என்பதையே மீண்டும் நினைவூட்டும் வகையிலும், பெண் பாதுகாப்பின் மீதான அவசியத்தையும் வலியுறுத்தும் சம்பவமாகவும் இது பார்க்கப்படுகின்றது.

பாரிஸ்: உணவகங்களில் மே தின வேலைச்சிக்கல்: அரசு சட்ட திருத்தம் அவசியம்!

0

மே 1-ஆம் தேதி தொழிலாளர் தினமாக இருந்தாலும், வணிகத் துறையில் காணப்படும் ஒரு முக்கியமான முரண்பாடு தற்போது பெரும் விவாதத்திற்கு வழிவகுத்துள்ளது. குறிப்பாக, பேக்கரிகள் போன்ற வெதுப்பகங்கள் இந்த நாளில் திறக்க அனுமதிக்கப்படுகின்றன. ஆனால் அந்தக் கடைகளை நடத்தும் முதலாளிகள் மட்டும் வேலை செய்யும் சுதந்திரம் பெற்றுள்ளனர்; அவர்களது ஊழியர்களுக்கு இந்நாள் வேலைக்கான சட்ட அனுமதி இல்லை என்பதே பெரும் சிக்கலாக இருக்கிறது.

2024 ஆம் ஆண்டு வாண்டே (Vendée) பகுதியில், ஐந்து பேக்கரிகள் தங்கள் ஊழியர்களை மே 1-ஆம் தேதி வேலைக்கு அழைத்ததற்காக அபராதம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் சிக்கின. இது பேக்கரி துறையின் முழுவதும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தேசிய பேக்கரி கூட்டமைப்புத் தலைவர் டொமினிக் அன்ராக்ட் (Dominique Anract) இந்த விவகாரத்தில் கருத்து தெரிவித்து, “பேக்கரிகள் 100 ஆண்டுகளுக்கும் மேலாக மே 1-ஆம் தேதி திறந்திருப்பது வழக்கம். இது நமது கூட்டு ஒப்பந்தங்களில் கூட உள்ளடக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போதைய சட்டம் தெளிவில்லாமல் இருப்பதால், தொழிலாளிகளும், முதலாளிகளும் குழப்பத்திற்கு உள்ளாகிறார்கள்,” என தெரிவித்தார்.

இந்த சூழ்நிலையை சரிசெய்யும் முயற்சியாக, தொழிலாளர் விவகார அமைச்சராகிய கத்தரின் வோத்ரின் (Catherine Vautrin) மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகிய ஆஸ்ட்ரிட் பானோசியான்-பூவே (Astrid Panosyan-Bouvet) ஆகியோர் சட்டத்தில் திருத்தங்களை கொண்டு வர தயாராக உள்ளனர். இவர்களின் நோக்கம் – ஊழியர்கள் தங்களது விருப்பப்படி மே 1-ஆம் தேதி வேலை செய்ய அனுமதி பெறும் உரிமையை சட்ட ரீதியாக உறுதி செய்வது.

இந்த நடவடிக்கை, பாரம்பரியதையும் தொழிலாளர் உரிமையையும் சமநிலைப்படுத்தும் ஒரு முயற்சி எனக் கருதப்படுகிறது.

பிரான்ஸ்: கடும் போக்குவரத்து நெரிசல்! தீர்வுகள்!

0

ஈஸ்டர் வார இறுதி நாட்களில், பிரான்ஸ் முழுவதும் முக்கியமான நெடுஞ்சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என Bison Futé எச்சரிக்கிறது. இந்த நெரிசலுக்கு முக்கியக் காரணம் – Zone A பகுதிகளில் (உதாரணமாக: போர்டோ, லியோன், கிளெர்மொங்-ஃபெர்ரான்) விடுமுறைகள் துவங்குகின்றன, மற்றும் Zone B (உதாரணமாக: மார்செய், ரென்ஸ், ஸ்ட்ராஸ்பூர்க்) பகுதிகளில் விடுமுறை முடிவடைகின்றது. இதனால் மக்கள் பலரும் ஒரே நேரத்தில் பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

முக்கிய நெரிசல் நாட்கள்:
வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 18)
காலை முதல் மாலை வரை அதிகமான நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது.
A1, A25, A13, A11, A63, A7 உள்ளிட்ட முக்கிய நெடுஞ்சாலைகளில் கூடுதல் நெரிசல், குறிப்பாக இத்தாலி எல்லை வழியாகவும் பேருந்துகள் மற்றும் சுற்றுலா வாகனங்கள் கூடுதலாக இருக்கலாம்.

சனிக்கிழமை (அப்ரல் 19):
மக்கள் விடுமுறைக்கு புறப்படும் நாளாக இருப்பதால், காலை நேரம் முதல் மதியம் வரை பயணங்கள் மிகவும் மந்தமாக இருக்கும்.
திங்கட்கிழமை (அப்ரல் 21):
விடுமுறை முடிந்து மக்கள் திரும்பும் நேரம் என்பதால், மாலையில் குறிப்பாக தெற்கு-வடக்கு திசைகளில் (South to North) போக்குவரத்து சுமையாக இருக்கும்.

பயணம் நேரங்கள்:
ஞாயிற்றுக்கிழமை (அப்ரல் 20):
போக்குவரத்து மிக மிதமாக இருக்கும் அதாவது நெரிசல் சமாளிக்க கூடிய அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. சுமூகமான பயணத்தை விரும்புவோருக்கு இது சிறந்த நாளாகும்.

பொதுப் போக்குவரத்து:
ரயில், மெட்ரோ மற்றும் பஸ் சேவைகள் சரிவர இயங்கும் என SNCF தெரிவித்துள்ளது. நெரிசலைத் தவிர்க்க இது ஒரு சிறந்த மாற்று வழியாகும்.

பாதுகாப்பு ஆலோசனைகள்:
👉உங்கள் பயணத்தை முன்பே திட்டமிடுங்கள் (நேரம் மற்றும் ;பயணிப்பதற்கான வழிமுறைகள்).
👉Bison Futé, Google Maps, Waze போன்ற செயலிகளை பயன்படுத்தி நேரடி போக்குவரத்து நிலவரத்தை சரிபார்க்கவும்.
👉நீண்ட பயணங்களுக்கு முன் உங்கள் வாகனத்தை சரிபார்க்கவும் – டயர் அழுத்தம், எரிபொருள் நிலை, பிரேக் நிலை போன்றவை.
👉குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பயணிக்கும்போது போதிய இடைவேளைகளை எடுத்துக் கொள்ளவும்.

ஈஸ்டர் விடுமுறையை கொண்டாடும் மக்கள் பெரிதளவில் சாலை பயணங்களைத் திட்டமிட்டு உள்ளதால், நெரிசல் தவிர்க்கப்பட முடியாது. ஆனால் சீராக திட்டமிடப்பட்ட பயணம், சரியான நாளைத் தேர்ந்தெடுக்கும் விவேகம், மற்றும் பொது போக்குவரத்து போன்ற மாற்று வழிகளால் நீங்கள் உங்கள் பயணத்தை சௌகரியமாக்கலாம்.

புலம்பெயர் தமிழர்கள்: தாயகம் காலியாகிறது – கனடா நிரம்புகிறது!

0

வடக்கு மாகாணம், தமிழர்களின் தாயகப் பிரதேசமாகக் கருதப்படும் இந்தப் பகுதி, தற்போது இலங்கையின் சனத்தொகை குறைந்த மாகாணமாகவும், கனடா உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்கு இடம்பெயர்ந்த தமிழர்களின் எண்ணிக்கை அதிகரிப்புடன், ஒரு புதிய சமூகப் பரிமாணத்தை உருவாக்கியுள்ளதையும் பிரதிபலிக்கிறது.

2024 கணக்கெடுப்பு மூலம் வெளியான முக்கிய விபரங்கள்
2024 ஆம் ஆண்டுக்கான குடிசன மற்றும் வீட்டு வசதிகள் தொகை மதிப்பு கணக்கெடுப்பின் படி, இலங்கையின் மொத்த சனத்தொகை 2 கோடியே 17 இலட்சத்து 63 ஆயிரத்து 170 ஆகப் பதிவாகியுள்ளது.
இதில்:
👉மேல் மாகாணம் 28.1% சதவீதத்துடன் அதிக சனத்தொகையுடன் முதல் இடத்தில் உள்ளது.
👉வடக்கு மாகாணம் 5.3% சதவீதம் மட்டுமே கொண்டதாக, சனத்தொகை குறைந்த மாகாணமாக பதிவாகியுள்ளது.
👉முல்லைத்தீவு மாவட்டம் – ஒரு சதுர கிலோமீட்டருக்கு வெறும் 50 நபர்களே வசிக்கின்றனர்.
👉கொழும்பு மாவட்டத்தில் இது 3,549 நபர்கள் ஆக உயர்ந்துள்ளது.
👉கம்பஹா மாவட்டம் 24,34,000 மக்கள் தொகையுடன் நாடில் அதிக மக்கள் உள்ள மாவட்டமாக இருக்கிறது.

வடக்கு மாகாணத்தின் சனத்தொகை விரிவான விபரங்கள்

மாவட்டம்சனத்தொகைஆண்டு வளர்ச்சி விகிதம்
முல்லைத்தீவு1,23,0002.23%
மன்னார்1,24,000
கிளிநொச்சி1,36,000
வவுனியா1,72,0000.01%

இடம்பெயர்வும் உலகத் தமிழர் பரவலும்
இலங்கையின் வடக்கிலிருந்து பெருமளவில் மக்கள் வெளியேறியுள்ளனர். குறிப்பாக:
👉கனடாவில் தற்போது 2.4 முதல் 3 லட்சம் தமிழர்கள் வாழ்கின்றனர்.
👉1983இல் வெறும் 150 பேர் மட்டுமே இருந்த நிலையில்,
👉2021இல் 1,40,000 பேர் கனடாவில் பிறந்துள்ளனர்.
👉பிரித்தானியா – 2 லட்சம் தமிழர்கள்
👉ஐரோப்பா, ஸ்காண்டிநேவியன் நாடுகள், அவுஸ்திரேலியா – மொத்தமாக 2 லட்சம் மக்கள்
👉இந்தியா – 1.5 லட்சம் தமிழர்கள்

தமிழர்களின் பரவல் – பன்முக சமூக அமைப்பாக மாறியமை
இப்போது உலகிலுள்ள இலங்கைத் தமிழர்கள் மூன்றாகப் பிரிக்கப்படலாம்:
மூன்றில் ஒரு பகுதி – வடக்கு கிழக்கில் வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – தென்பகுதிகளில், நாட்டிற்குள் சிதறி வாழ்கின்றனர்
மூன்றில் ஒரு பகுதி – இலங்கைக்கு வெளியே, பெரும்பாலும் மேற்கு நாடுகளில் வசிக்கின்றனர்

யுத்தம் முடிவடைந்தது ஒரு திருப்புமுனை
2009ஆம் ஆண்டு யுத்தம் முடிவடையாதிருந்தால்:
தமிழர்களின் பெரும் இடம்பெயர்வு தொடர்ந்திருக்கும்
வடக்கு கிழக்கு மக்கள் இலவசமான பிரதேசங்களாக மாறியிருக்கும்

2004இல் “தேசம்” சஞ்சிகையில் வெளியான ஆய்வுக் கட்டுரை, “சமாதானத்தின் அவசியம்” என்பதைக் கூறி, தொடர்ந்து யுத்தம் இடம்பெற்றால் தமிழர்கள் நாடு முழுவதும் அல்லது வெளிநாடுகளுக்கே முற்றாக இடம்பெயர்வர் எனக் கணித்திருந்தது
இன்று வடக்கு மாகாணம் மக்கள்தொகை குறைவாக இருப்பது, யுத்தம், இடம்பெயர்வு, வசதிகளின் பற்றாக்குறை போன்ற காரணிகளால் விளைந்த நீண்டகால சமூக விளைவாக பார்க்கப்பட வேண்டும். புதிய கணக்கெடுப்புகள், உலகத் தமிழர்களின் பரவல், மற்றும் சமாதானத்தின் மதிப்பு ஆகியவற்றை இணைத்து நம்மால் எதிர்காலத்தை சிறப்பாக வடிவமைக்க முடியும்.

அமெரிக்காவின் வரி: இலங்கையின் பொருளாதாரத்திற்கு அச்சுறுத்தல்!

0

இலங்கையின் பொருளாதாரத்திற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய முக்கிய செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கா, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்கள்மீது 44% வரி விதித்துள்ளது. இது, இலங்கையின் முக்கியமான ஏற்றுமதி சந்தையாக இருப்பது மட்டுமல்லாமல், நாட்டின் மொத்த வர்த்தக வருவாயில் அமெரிக்காவின் பங்கு குறிப்பிடத்தக்க அளவில் உள்ளதைப் பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட இந்த திடீர் நடவடிக்கை, இரு நாடுகளுக்கிடையிலான வர்த்தக உறவில் புதிய பதற்றங்களை உருவாக்கியுள்ளது. 2024 ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி, இலங்கை தனது மொத்த ஏற்றுமதியின் சுமார் 23% ஐ அமெரிக்காவிற்கு அனுப்பியுள்ளது. இதில், ஆடைத் துறை மட்டும் 70% க்கும் அதிகமாக பங்களித்து, சுமார் 3 பில்லியன் டொலர் வருமானத்தை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் 44% வரி உயர்வு, குறிப்பாக ஆடை உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. விலை அதிகரிப்பால், அமெரிக்க சந்தையில் இலங்கையின் பொருட்கள் போட்டித் திறனை இழக்கும் அபாயம் அதிகமாக உள்ளது. இதனால், ஏற்றுமதி குறையும்; தொடர்ச்சியாக, நாட்டின் வெளிநாட்டு நாணய வருமானம் மற்றும் பொருளாதார வளர்ச்சி பாதிக்கப்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

அதிக வரி சுமையால், சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மிகவும் பாதிக்கப்படலாம். இது வேலை இழப்புகளும் தொழில் நிறுவனங்கள் நிரந்தரமாக மூடப்படுத்தல் போன்ற எதிர்மறை விளைவுகளை உருவாக்கும் வாய்ப்பை ஏற்படுத்துகிறது. ஏற்கனவே நெருக்கடியான பொருளாதார சூழலில் தவித்து வரும் இலங்கைக்கு இது மேலும் அழுத்தத்தை உருவாக்கும் எனவும் கருதப்படுகிறது.

இந்த நிலைமையை எதிர்கொள்வதற்காக, இலங்கை அரசு அவசர நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. இதற்காக ஒரு சிறப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அமெரிக்க அரசுடன் நேரடி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும, சர்வதேச நாணய நிதியமும் (IMF) இந்த நெருக்கடிக்கு தீர்வுகாணும் நோக்கில் ஆழ்ந்த ஆய்வுகளில் ஈடுபட்டு வருகிறது.

எதிர்காலத்தில் இந்த பிரச்சனைக்கு ஏதேனும் தீர்வு கிடைக்குமா? அல்லது இலங்கை பொருளாதாரம் மேலும் சிக்கலுக்கு உள்ளாகுமா? என்பதை காலமே நிர்ணயிக்க வேண்டும். இந்நிலையில், ஏற்றுமதியாளர்கள் மாற்று சந்தைகளைத் தேடுவது மற்றும் உற்பத்தி செலவுகளை குறைக்கும் முயற்சிகளை மேற்கொள்வது அவசியமாகியுள்ளது.

பிரான்ஸ் குடியுரிமை மறுப்பு !இது ஒரு காரணமா?

0

தோட்டத்தில் சத்தமாக இயந்திரங்களை பயன்படுத்தி புல் வெட்டியா காரணத்தால் குறியுரிமை மறுக்கப்பட்ட சம்பவம் ஒன்று சுவிட்சர்லாந்தில் இடம்பெற்றுள்ளது.

சுவிட்சர்லாந்தின் ஜூரா மாகாணத்தில் பத்து வருடங்களுக்கும் மேலாக வாழ்ந்து வந்த 50 வயது பிரான்ஸ் நாட்டவரின் குடியுரிமை விண்ணப்பம், சத்தமாக புல் வெட்டியதாகவும், சுவிஸ் கலாச்சாரத்துடன் ஒத்துப்போகவில்லை எனவும் கூறி நிராகரிக்கப்பட்டது.

அந்த நபர் வார இறுதி நாட்களில் தோட்டத்தில் இயந்திரம் மூலம் புல் வெட்டுவதால் அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறு ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டது. மேலும், அவரது வீடு நீண்டநாளாகப் புதுப்பிப்பில் இருப்பதாலும், சுற்றிலும் குப்பைகள் குவிவதாலும் அவர் ஒரு “நல்ல குடிமகன்” இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இந்த தீர்ப்புக்கு எதிராக அவர் மேல்முறையீடு செய்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அவர் தேவையான மொழிப் பயன்பாடு மற்றும் குடியுரிமைக்கான பிற நிபந்தனைகளை பூர்த்தி செய்துள்ளார் என உறுதிப்படுத்தி, அவரது குடியுரிமை விண்ணப்ப நிராகரிப்பை ரத்து செய்தது.

இருப்பினும், அயலில் வசிப்பவர்களுக்கு இடையூறான செயற்பாடுகள் குறித்து அவர் அவதானமாக இருக்க வேண்டும் எனவும் இனி சத்தம் குறைந்த முறையில் தோட்டப்பணிகளைச் செய்யுமாறு அறிவுறுத்தி, அவருக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்தது.

கனடா: மவுசு கூடிய கனேடிய பல்கலைக்கழகங்கள்! அப்படி என்னதான் இருக்கு?

0

அமெரிக்கா முழுவதும் உள்ள மாணவர்கள், இப்போது அதிக அளவில் தமது மேற்படிப்புக்காக கனடாவின் பல்கலைக்கழகங்களை நாடுகின்றார்கள் என புதிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

விண்ணப்பங்களில் 27% உயர்வு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கல்விக் கொள்கைகள் குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் பெடரல் நிதி குறைப்பும், வெளிநாட்டு மாணவர்களின் விசா அனுமதிகளில் கடுமை ஏற்படுத்தியதுமே – இந்த மாற்றத்திற்கு காரணமாக கருதப்படுகிறது.

வான்கூவரில் உள்ள பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் (UBC) தெரிவித்ததின்படி, 2025 கல்வியாண்டுக்கான பட்டதாரி படிப்புகளுக்கான அமெரிக்க விண்ணப்பங்கள், 2024-இல் இருந்ததைவிட 27 சதவிகிதம் அதிகமாக உள்ளன.

அமெரிக்க மாணவர்களை தக்க வைக்கும் முயற்சிகள்
செப்டம்பர் மாதம் தொடங்கும் படிப்புகளுக்காக, அமெரிக்க மாணவர்களிடம் இருந்து பெறப்படும் விண்ணப்பங்களை விரைவில் செயலாக்கும் திட்டத்துடன், வான்கூவர் வளாகம் மீண்டும் பட்டதாரி சேர்க்கைகளைத் துவங்கியுள்ளது.

அதிகமான விண்ணப்பங்கள் பெற்ற பல்கலைக்கழகங்கள்
ரொறன்ரோ பல்கலைக்கழகம், மாணவர் எண்ணிக்கையின் அடிப்படையில் கனடாவின் மிகப்பெரிய பல்கலைக்கழகமாக இருக்கின்றது. 2025 கல்வியாண்டிற்கான ஜனவரி காலக்கெடுவுக்குள், இது அமெரிக்க விண்ணப்பங்களை அதிகமாகப் பெற்றுள்ளது. அதேபோல், வாட்டர்லூ பல்கலைக்கழகமும் அமெரிக்க மாணவர்களின் எண்ணிக்கையில் முன்னிலையில் உள்ளது.

இவ்வாறு மாணவர்களை எண்ணிக்கை அதிகரிப்பதற்கு என்ன காரணமென ரொறன்ரோ மற்றும் வாட்டர்லூ பல்கலைக்கழகங்கள் பகிரங்கமாக வெளிப்படுத்தாத நிலையில், வான்கூவர் வளாகம் மட்டும் ட்ரம்பின் கல்விக் கொள்கைகளே முக்கிய காரணம் என தெளிவாக கூறியுள்ளது.

நாடுகடத்தல் மற்றும் விசா ரத்து நடவடிக்கைகள்
ட்ரம்ப் நிர்வாகம் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் நூற்றுக்கணக்கான மில்லியன் டொலரைக் குறைத்து, யூத எதிர்ப்புக்கு எதிரான போராட்டங்கள் ஒழுங்குபடுத்தப்படவில்லை என சுட்டிக்காட்டி, பல்கலைக்கழகங்களை கொள்கை மாற்றத்துக்குத் ஆளாகியுள்ளது.

மேலும், பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற சில வெளிநாட்டு மாணவர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன், அவர்களுக்கான நாடுகடத்தல் நடவடிக்கையும்
முன்னெடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், நூற்றுக்கணக்கான மாணவர்கள் விசா ரத்தாகி அமெரிக்காவில் செய்வதறியாது தவிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

கனடாவின் புதிய வரம்புகள்
ஒரு புறம் அமெரிக்காவில் நிலவும் ஒடுக்குமுறைகள் காரணமாக மாணவர்கள் கனடாவை நாடி வருகிறார்கள் என்றாலும், கனடா தனது சர்வதேச மாணவர் எண்ணிக்கையை தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக கட்டுப்படுத்தி வருகிறது.
இதன் விளைவாக, அமெரிக்கா உள்ளிட்ட பிற நாடுகளின் மாணவர்களுக்கு உள்ள இடங்கள் குறைந்துவிட்டது. எதிர்காலத்தில் சர்வதேச மாணவர்களுக்கு நுழைவுத் தடை அல்லது இட வசதியில் சிக்கல் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பிரிட்டன்: பெற்றோல் விலையில் மாற்றம்! வட்டி விகிதத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்!

0

பிரித்தானியாவில் பெட்ரோல் விலை குறைவதன் காரணமாக, பணவீக்கம் தொடர்ந்து இரண்டாவது மாதமாகக் குறைந்துள்ளது என அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 2025 மார்ச் மாதத்தில் நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) பணவீக்கம் 2.6% ஆக குறைந்துள்ளது, இது பிப்ரவரியில் பதிவான 2.8% விடக் குறைந்ததாகும். இந்த வீழ்ச்சி பொருளியலாளர்களின் எதிர்பார்ப்பு (2.7%) க்கும் கீழே இருந்தது.

இது 2023 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு முதல் முறையாக 3% க்கும் குறைவான பணவீக்க விகிதமாகும். இது நாட்டு மக்களின் வாழ்க்கைச் செலவுகளில் குறைவடையக்கூடும் என்பதற்கான ஒரு நம்பிக்கையூட்டும் மாற்றமாகக் கருதப்படுகிறது.

தகவல் புள்ளிவிவரங்களின் அலுவலகம் (ONS) வெளியிட்ட அறிக்கையின்படி, பெட்ரோல் விலை குறைதலும் உணவுப் பொருட்களின் விலை மிகுந்த அளவில் அதிகரிக்காததும்தான் தற்போதைய பணவீக்கக் குறைவு காரணிகளாகக் கூறப்பட்டுள்ளன. ONS தலைமை பொருளியலாளர் கிராண்ட் ஃபிட்ஸ்னர் கூறுகையில், “இந்த மாதம் ஆடைகள் மற்றும் காலணிகள் விலை உயர்விலிருந்து மட்டுமே எப்போதும் போல உள்ள மேலதிக அழுத்தம் ஏற்பட்டது” எனத் தெரிவித்தார்.

இதேவேளை, பிரித்தானிய நிதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ், “விலைவாசி வீழ்ச்சி, சம்பள வளர்ச்சி மற்றும் பொருளாதாரத்தின் மெதுவான ஆனால் நிலையான முன்னேற்றம், அரசு அமைத்துள்ள மையக் கொள்கைகள் செயல்படுவதை நிரூபிக்கின்றன. ஆனாலும் நாங்கள் செய்வதற்கு இன்னும் பல உள்ளன,” என்று கூறினார்.

பிரித்தானியாவின் மத்திய வங்கியான Bank of England, பணவீக்க வீழ்ச்சியைத் தொடர்ந்து அடுத்த மாத வட்டி விகிதக் கூட்டத்தில் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு ஒரு முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய வட்டி விகிதம் 5.25% ஆக உள்ளது. இது கடந்த சில மாதங்களாக பொருளாதாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் உயர்வாக வைத்திருந்த நிலையாகும்.

ஆனால் தற்போது பணவீக்கம் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது என்பதால், வட்டி விகிதத்தை சிறிதளவு குறைப்பதற்கான வாய்ப்பு அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இது வீட்டு கடன் வாங்குபவர்களுக்கு வணிகக் கடனாளிகளுக்கும் ஒரு நிம்மதியான சூழலை உருவாக்கலாம்.

மேலும், வாகன ஓட்டிகளுக்கு இனி சில வாரங்களில் பெட்ரோல் விலை மேலும் குறையும் என்று எரிசக்தி வல்லுநர்கள் முன்கூட்டியே கணித்துள்ளனர். இது நுகர்வோரின் செலவுகளைக் குறைக்கும் வழியாகவும், மொத்த பொருளாதாரத்தில் நம்பிக்கையை வளர்க்கும் வழியாகவும் இருக்கலாம்.

பிரான்ஸ்: மருத்துவக் காப்பீட்டில் சீரமைப்பு! அரச செலவைக் குறைக்கும் திட்டம்!

0

சமூக பாதுகாப்புத் திட்டங்களின் செலவினங்களில் உருவாகும் பற்றாக்குறையை சமாளிக்க புதிய பரிந்துரை ஒன்றை தணிக்கையாளர் நீதிமன்றம் (Cour des Comptes) முன்வைத்துள்ளது. வருமானத்துக்கு ஏற்ப மருத்துவக் காப்பீட்டுத் தொகையை மாற்றியமைக்கும் திட்டம் தான் தற்போது அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த பரிந்துரையின் முக்கிய நோக்கம் அதிக வருமானம் பெறும் மக்களுக்கான காப்பீட்டுத் தொகையை குறைத்து, குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு தற்போதைய நிலையை மாற்றாமல் தொடர்வதாகும். இதன் மூலம், ஒருபுறம் சமூக நீதி பேணப்படுவதோடு, மற்றொரு புறம் அரசு செலவுகளில் முக்கியமான ஒதுக்கீட்டில் கட்டுப்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2025ஆம் ஆண்டுக்கான கணிப்புகளின்படி, €265.4 பில்லியன் யூரோக்கள் சமூக பாதுகாப்பு காப்பீட்டு செலவாக இருக்கும் என தெரியவந்துள்ளது. இது கடந்த ஆண்டுகளைவிட அதிகமாகும். இதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, €40 பில்லியன் யூரோ செலவைக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் முன் வைத்துள்ள நிலையில், இந்த புதிய பரிந்துரை ஒரு முக்கிய விடயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால், வருமான அடிப்படையில் காப்பீட்டுத் தொகையை வகுப்பது நடைமுறைப்படுத்தும் போது என்னவெல்லாம் சவால்கள் எதிர்நோக்கும் என்பதை அரசு இன்னும் தெளிவாக அறிவிக்கவில்லை. வருமானத்தை எவ்வாறு மதிப்பீடு செய்யும், எந்த வருமான வரம்புகளில் எந்த அளவு தொகை விதிக்கப்படும் என்பது போன்ற விவரங்கள் குறித்து தெளிவான வரையறைகள் இன்னும் வெளியிடப்படவில்லை.

இந்த திட்டம் அமலுக்கு வந்தால், வரி செலுத்தும் மக்களிடம் மற்றும் சமூக பாதுகாப்பு முறைமையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு சமூக-பொருளாதார நடவடிக்கையாக இருக்கும் என்பது உறுதி.

பாரிஸ்: கார் வாங்க முதல் இதை படியுங்கள் 2025

0

Guide Voiture Paris 2025

பாரிஸ், உலகின் கனவு நகரம்! ஆனால், இந்த அழகான நகரத்தில் கார் ஓட்டுவது அல்லது சொந்தமாக வைத்திருப்பது சரியா? பாரிஸில் கார் வாங்குவது (acheter voiture Paris), சிறந்த மாடலைத் தேர்ந்தெடுப்பது, கட்டாய கார் காப்பீடு (assurance auto Paris) பெறுவது மற்றும் நகரத்தில் கார் பயன்படுத்துவதற்கான நடைமுறை குறிப்புகள் (conseils pratiques) அடங்கிய முழுமையான வழிகாட்டி இதோ. இந்த Paris car guide உங்களுக்கானது!

பாரிஸுக்கு ஏற்ற கார்கள் எவை? (Meilleure Voiture pour Paris)

பாரிஸில் கார் ஓட்டுவது சில சவால்களைக் கொண்டது. குறுகிய தெருக்கள், கடுமையான போக்குவரத்து நெரிசல் (trafic Paris), மிகக் குறைவான மற்றும் விலை உயர்ந்த பார்க்கிங் (stationnement Paris) ஆகியவை முக்கிய பிரச்சனைகள். மேலும், பாரிஸ் மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் குறைவான மாசு உமிழ்வு மண்டலங்கள் (Low Emission Zones – Zone à Faibles Émissions Mobilité – ZFE) உள்ளன. இங்கு பயணிக்க உங்கள் காரில் Crit’Air sticker எனப்படும் காற்றுத் தர ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்க வேண்டும், மேலும் பழைய, அதிக மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்குத் தடைகளும் உண்டு.

எனவே, பாரிஸுக்கு ஏற்ற கார்கள் பொதுவாக:

  1. சிறிய கார்கள் (Voitures Citadines / City Cars): ரெனால்ட் கிளியோ (Renault Clio), பியூஜோ 208 (Peugeot 208), சிட்ரோயன் C3 (Citroën C3), டேசியா சண்டேரோ (Dacia Sandero) போன்ற சிறிய வகை கார்கள் நகர ஓட்டத்திற்கு மிகவும் ஏற்றவை. இவை குறுகிய தெருக்களில் எளிதாகச் செல்லவும், பார்க்கிங் செய்யவும் வசதியாக இருக்கும். (Meilleure voiture citadine).
  2. எலக்ட்ரிக் கார்கள் (Voitures Électriques / Electric Cars): சுற்றுச்சூழல் விழிப்புணர்வு மற்றும் ZFE கட்டுப்பாடுகள் காரணமாக, எலக்ட்ரிக் கார்களின் (electric car Paris) பயன்பாடு அதிகரித்து வருகிறது. ரெனால்ட் ஸோயி (Renault Zoé), பியூஜோ e-208 (Peugeot e-208), டெஸ்லா மாடல் 3 (Tesla Model 3) போன்றவை பிரபலமாக உள்ளன. அரசாங்க மானியங்கள் (aide gouvernementale voiture électrique) மற்றும் சார்ஜிங் நிலையங்களின் (bornes de recharge) அதிகரிப்பு ஆகியவை இவற்றின் வளர்ச்சிக்கு உதவுகின்றன.
  3. ஹைப்ரிட் கார்கள் (Voitures Hybrides / Hybrid Cars): பெட்ரோல்/டீசல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டிலும் இயங்கும் ஹைப்ரிட் கார்களும் ஒரு நல்ல தேர்வாக இருக்கின்றன.

எந்த கார் அதிகம் விற்கிறது? (Quelle voiture se vend le plus?)

பிரான்ஸில் பொதுவாக ரெனால்ட், பியூஜோ, சிட்ரோயன் போன்ற உள்நாட்டு பிராண்டுகளும், டேசியா, வோக்ஸ்வாகன் போன்ற ஐரோப்பிய பிராண்டுகளும் அதிகம் விற்பனையாகின்றன. குறிப்பிட்ட மாடல்களின் விற்பனை புள்ளிவிவரங்கள் மாதம் தோறும் மாறும். L’Argus போன்ற பிரெஞ்சு ஆட்டோமொபைல் வெளியீடுகள் அல்லது அதிகாரப்பூர்வ விற்பனைத் தரவுகளைப் பார்ப்பது துல்லியமான தகவலைத் தரும். “Used car” (voiture occasion) சந்தையும் பிரான்ஸில் மிகவும் பெரியது.

கார் வாங்குதல் மற்றும் உரிமம் (Acheter Voiture & Propriété)

  • புதியதா? பழையதா? (Neuf ou Occasion?): புதிய கார் வாங்குவதா அல்லது பயன்படுத்திய கார் வாங்குவதா (acheter voiture occasion) என்பதை உங்கள் பட்ஜெட் மற்றும் தேவையைப் பொறுத்து முடிவு செய்யலாம்.
  • எங்கே வாங்குவது?: அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் (concessionnaire auto), சுயாதீன விற்பனையாளர்கள் அல்லது ஆன்லைன் தளங்கள் (Leboncoin போன்றவை) மூலம் வாங்கலாம்.
  • நிர்வாக நடைமுறைகள்: கார் வாங்கிய பின், அதை உங்கள் பெயரில் பதிவு செய்து Carte Grise (வாகனப் பதிவுச் சான்றிதழ்) பெற வேண்டும். மேலும், குறிப்பிட்ட கால இடைவெளியில் Contrôle Technique (தொழில்நுட்ப ஆய்வு – MOT போன்றது) செய்வது கட்டாயம்.

பிரான்ஸில் கார் காப்பீடு: கட்டாயம் மற்றும் முக்கியமானது (Assurance Auto France: Obligatoire!)

பிரான்ஸில் கார் ஓட்ட வேண்டுமென்றால், குறைந்தபட்சம் மூன்றாம் தரப்புப் பொறுப்புக் காப்பீடு (assurance au tiers அல்லது responsabilité civile) வைத்திருப்பது சட்டப்படி கட்டாயம் (obligatoire). இது நீங்கள் மற்றவர்களுக்கு ஏற்படுத்தும் சேதங்களை ஈடு செய்யும்.

காப்பீட்டு வகைகள்:

  1. Assurance au Tiers (Third-Party): இது குறைந்தபட்ச சட்டத் தேவை. உங்கள் தவறால் மற்ற வாகனங்கள், நபர்கள் அல்லது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களை மட்டுமே இது καλύπτει (kalyptei – καλύπτει – καλύπτει). உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களுக்கு இது பொருந்தாது.
  2. Tiers Plus / Intermédiaire (Third-Party, Fire & Theft): மூன்றாம் தரப்புப் பொறுப்புடன், தீ, திருட்டு, கண்ணாடி உடைதல், இயற்கை சீற்றங்கள் போன்ற கூடுதல் பாதுகாப்புகளையும் இது வழங்குகிறது.
  3. Assurance Tous Risques (Comprehensive): இது முழுமையான காப்பீடு. மேலே உள்ள அனைத்துப் பாதுகாப்புகளுடன், உங்கள் தவறால் உங்கள் வாகனத்திற்கு ஏற்படும் சேதங்களையும் இது καλύπτει (kalyptei – καλύπτει – καλύπτει).

காப்பீட்டுச் செலவைப் பாதிக்கும் காரணிகள் (Coût Assurance Auto):

  • உங்கள் ஓட்டுநர் அனுபவம் (வயது, ஓட்டுநர் உரிமம் பெற்ற ஆண்டு).
  • உங்கள் ஓட்டுநர் வரலாறு (விபத்துகள்) – Bonus-Malus அமைப்பு (நல்ல ஓட்டுநர்களுக்கு தள்ளுபடி, விபத்து ஏற்படுத்தியவர்களுக்கு கூடுதல் கட்டணம்).
  • காரின் வகை, மாடல், வயது, மற்றும் அதன் சக்தி.
  • கார் நிறுத்தப்படும் இடம் (பாரிஸ் போன்ற நகரங்களில் பொதுவாக அதிகம்).
  • வருடாந்திர ஓட்டும் தூரம்.

காப்பீடு பெறுவது எப்படி? (Obtenir Devis Assurance Auto)

  • ஆன்லைன் ஒப்பீட்டாளர்கள் (Comparateur Assurance Auto): பல நிறுவனங்களின் திட்டங்களை ஒப்பிட்டுப் பார்க்க இது சிறந்த வழி. LeLynx.fr, LesFurets.com போன்றவை பிரபலமானவை. (“Compare car insurance France“)
  • நேரடி காப்பீட்டு நிறுவனங்கள்: AXA, MAIF, MACIF, GMF, Allianz போன்ற நிறுவனங்களை நேரடியாக அணுகலாம்.
  • வங்கிகள்: பல வங்கிகளும் கார் காப்பீட்டை வழங்குகின்றன.
  • காப்பீட்டு முகவர்கள் (Agents / Courtiers).

ஒரு car insurance quote France பெறுவதற்கு உங்கள் ஓட்டுநர் உரிமம், கார் பதிவு (Carte Grise), மற்றும் முகவரிச் சான்று தேவைப்படும். குறிப்பாக இளம் ஓட்டுநர்களுக்கான காப்பீடு (assurance voiture jeune conducteur) சற்று விலை கூடுதலாக இருக்கலாம்.

பாரிஸில் கார் பயன்படுத்துவதற்கான குறிப்புகள் (Conseils Conduite Paris)

  • பார்க்கிங் (Stationnement): மிகவும் சவாலானது மற்றும் விலை உயர்ந்தது. தெருவோர பார்க்கிங் விதிகள் சிக்கலானவை. நிலத்தடி பார்க்கிங் கேரேஜ்கள் (underground parking) வசதியானவை ஆனால் விலை அதிகம். “Parking Paris pas cher” (மலிவான பார்க்கிங்) தேடுவது கடினம்.
  • போக்குவரத்து (Trafic): நெரிசல் அதிகம், குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில். பொறுமை அவசியம்.
  • மாற்று வழிகள் (Alternatives): பாரிஸின் பொதுப் போக்குவரத்து (transports en commun) – மெட்ரோ, RER, பஸ் – மிகவும் சிறப்பானது மற்றும் பெரும்பாலும் காரை விட வேகமானது. கார் பகிர்வு (autopartage – car sharing) சேவைகளும் கிடைக்கின்றன.

முடிவுரை

பாரிஸில் கார் வைத்திருப்பது சில சமயங்களில் வசதியாக இருந்தாலும், அதன் சவால்களையும் செலவுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். உங்கள் தேவை, பட்ஜெட், மற்றும் வாழ்க்கை முறைக்கு ஏற்ப சரியான காரைத் தேர்ந்தெடுத்து, கட்டாயமாகச் சரியான கார் காப்பீட்டைப் பெறுவது அவசியம். நகரத்தின் சிறந்த பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துவதும் ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கலாம். உங்கள் தேவைகளை ஆராய்ந்து சிறந்த முடிவை எடுங்கள்!