Latest Posts

Sale!

Saree

Original price was: 54,00 €.Current price is: 37,00 €.
Sale!

Saree

Original price was: 60,00 €.Current price is: 32,00 €.
Sale!

Saree

Original price was: 81,00 €.Current price is: 50,00 €.
Sale!

Half saree

Original price was: 81,00 €.Current price is: 55,00 €.
Sale!

Saree

Original price was: 141,00 €.Current price is: 124,00 €.
Sale!

Saree

Original price was: 72,00 €.Current price is: 34,00 €.
Sale!

half saree

Original price was: 70,00 €.Current price is: 43,00 €.
Sale!

Saree

Original price was: 123,00 €.Current price is: 65,00 €.

தணியாத விடுதலை தாகங்கள் : தளராத துணிவோடு…

Sale!

Saree

Original price was: 172,00 €.Current price is: 141,00 €.
Sale!

Half saree

Original price was: 81,00 €.Current price is: 55,00 €.
Sale!

ch

Original price was: 31,00 €.Current price is: 20,00 €.
Sale!

Saree

Original price was: 58,00 €.Current price is: 29,00 €.

ஆதியிலிருந்து அந்தம் வரை பிறப்பிலிருந்து இறப்பு வரை விடாமல் மனித மனம் விடுதலையை தேடியே அலைபாய்ந்தவாறு உள்ளது.இதயத்தின் ஒவ்வொரு துடிப்பும் விடுதலையை நோக்கியதாகவே உள்ளது.தன்னை சுற்றியுள்ள சகல கட்டுக்களிலிருந்தும் வெளியில் வருவதே மனித இனத்தின் மகத்தான இலக்காக இருக்கின்றது.இது வெளியில் அவசரமாக சுழன்று கொண்டிருக்கும் நனவு மனதுக்கு அதிகமாக தெரிய வாய்ப்பில்லை.

எனினும் மனித உள்ளுணர்வு இதனை மனிதன் நினைக்கும்,செய்யும் ஒவ்வொரு செயலிலும் எதிரொலிக்க வைக்கின்றது.மனித மனம் தற்காலிக இன்ப துன்பங்களில் தன்னை குவித்து இயங்கிகொண்டுள்ள போதிலும்,மனதினால் உருவாக்கப்பட்ட காலத்தினை கொண்டே அத்தனையையும் அளவிடுகின்றது.இன்ப துன்பங்களை பற்றி காலத்தினை அடிப்படையாக கொண்ட மனித மனங்களின் அளவிடுகள்தான் மதங்களை படைத்து,சொர்க்க நரகங்களையும் படைத்தது.உண்மையில் மனித மனதுக்கு சொர்க்க நரகங்கள்தான் தேவைப்படுகின்றன.

அதை அடைய வழிகளாக மதங்களை அது படைத்திருக்கின்றது.மதங்களை படைத்து அதற்கு முக்கியத்துவம் கொடுப்பது போல் நனவு மனதுக்கு தோன்றினாலும்,அதற்கு நிலையாக தேவைப்படுவது என்னவோ சொர்க்க,நரகங்கள்தான்,மனங்கள் இரண்டு வகையில் இயங்குகின்றன,ஆனால் இரண்டின் இலக்கும் ஒன்றுதான்,ஒன்று சொர்க்கத்தை நேராக அடைவது,இன்னொன்று இல்லாத நரகத்தை எதிர்மறையாக கருதி எதிர் இயங்குதல் மூலம் சொர்க்க நிலையை அடைதல்,சொர்க்கம் என்பதன் அர்த்தம்

மனித மனதினை ஆழும் ஆன்மா காலத்தை கடந்து வாழுதல்,நரக நிலை என்பது தொடர்ந்து காலத்துக்குள் ஆட்படுதல்.சொர்க்க நரகத்தை இறுதி இலக்காக மனித மனம் வைத்துள்ளது இந்த நிமிடத்தில் இருக்கும் மகிழ்ச்சியை எப்படி நிலையான மகிழ்ச்சியாக மாற்றுவது என்பதே காலத்துக்கு உட்பட்டு இயங்கும் மனித மனதின் இலக்காகும்,அந்த இலக்கை அடையும் பொருட்டே அது தொடர்ந்து பல பொருட்களை தாண்டி பல உடல்களினூடு பயணித்து கொண்டே இருக்கும்…

விடுதலை உணர்வு என்பது இறுதி ஆன்ம விடுதலை பற்றிய உள்ளுணர்வாகும்.இது அனைவருக்கும் உள் இருந்து இயக்குகின்ற போதிலும் காலத்திற்கு ஒருவர் எவ்வளவு அடிமையாக இருக்கின்றார் என்பதை பொறுத்து அந்த உணர்வு கூட,குறைவாக காணப்படும்.கூடுதல் குறைதல் என்பதன் கருத்து இங்கு எதுவும் உண்மையில் தனிதனியாக இல்லை கூடி குறைவதற்கு,உலகில் நிலத்தை சுற்றியிருக்கும் கடல் அனைத்தும் ஒன்றாக இணைந்திருப்பது போலவே இதுவும்.விடுதலை உணர்வு எங்கும் சூழ்ந்து காணப்படுகின்றது.

அவற்றை திறந்த மனதுடன் அணுகுபவர்களுக்களின் ஊடு அது பாய்ந்து உலகில் தனது கருத்துலகத்தை தொடர்ந்து பரப்புகின்றது.உலகின் மொத்த நீரில் அதிகமான சதவீதம் உப்பு நீராக இருக்கின்ற போதும் அதிலிருந்து 1% குடிநீர் உருவாகுவது போலவே,இந்த விடுதலை பேருணர்வும் அதிகமான அடிமைகளை உலகம் முழுக்க கொண்டு அதிலிருந்தே விடுதலை வீரர்கள் உருவாகின்றனர்.உலகில் 99% மக்கள் அடிமை வாழ்க்கை வாழ்வதற்கான ஒரே காரணம் பயம்,

மனிதர்களின் அத்தனை பயங்களுக்கும் காரணமாக அமைவது மரண பயமாகும்,அவ் மரண பயத்தை வென்றுவிடுபவனால் மட்டுமே பரிபூரண விடுதலையே வென்றெடுக்க முடியும் என்பது மாபெரும் விடுதலை தத்துவத்தின் அசைக்க முடியாத நம்பிக்கை,மேலும் விழிப்புணர்வே விடுதலைக்கான முதல்படியாக இருக்க முடியும் என்பது எத்தனை ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஆளும் கருத்துலகினால் அடித்து விழுத்தப்பட முடியாத ஒன்றாக இருக்கின்றது.

உலகியல் தொடர்பான இரக்கம்,துன்பம்,கண்ணீர் என்பன ஒருவனின் அறியாமையின் அடையாளங்கள்,மனிதர்களின் ஒவ்வொரு செயல்களும் பிரபஞ்சத்தின் முக்குணங்களால் தாக்கமடைந்து மாசு அற்றதாகின்றது.நீங்கள் எதை செய்தாலும் நன்மையே,எது எங்கு நடந்தாலும் பிரபஞ்சம் அதற்கு இறுதியில் நன்மை வடிவம் கொடுத்தே செயல்படுத்துகின்றது,இதை கீதையில் அழகாக சொல்லியிருப்பார்கள்,”எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது,எது நடக்கின்றதோ,அதுவும் நன்றாக நடக்கின்றது,

எது நடக்க இருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடக்கும்” என்றும் கடமையை செய் பலனை எதிர்பாராதே என்று சொல்வது இதற்காகதான்,பலன்களை ஒன்றுக்கொன்று உள்இணைப்பினால் நடப்பவை,அவற்றை உங்களால் கையாளமுடியாது என்பதனாலேயே அதை எதிர்பார்க்க வேண்டாம் என்று உங்களுக்கு கூறப்படுகின்றது.வேதங்களின் அடிப்படை வேதமான ரிக் வேதம் ஒட்டு மொத்த சுலோகங்களும் சேர்ந்து உரத்து சொல்வது இதை மட்டுமே,”செய்” என்ற ஒரு வார்த்தையினுள் அத்தனையையும் அடக்கிவிடலாம்,நன்மை தீமை என்று இங்கு எதுவும் இல்லை,,நன்மை தீமை என்பது மனக்கணக்கு,மனம் என்பது மாயை,நிரந்தரம் இல்லாத ஒன்று.அதனை நம்பி நிலையில்லாமையில் உழல்வது பாவம்.

ஒருவன் தான் ஏன் வருந்துகின்றேன் என்பதை விசாரணை செய்யாமல் காலத்தை கழிப்பானாயின் அவன் நிறைவுள்ள மனிதனாக மாட்டான்.ஒருவன் மனதில் நான் ஏன் வருந்துகிறேன் என்ற விசாரணை தொடங்கும் போதே அவன் தன் வாழ்க்கையை வாழத்தொடங்குகின்றான்,நாங்கள் ஒவ்வொருவரும் ஒரு வகையில் ஆளப்படுபவர்கள்,நாம் உடல்களால் கட்டுப்பட்டு உறவு நிலை பந்தங்களால் பிணைக்கப்பட்டு இருக்கின்றோம்,

எனினும் ஒவ்வொரு தனியனின் இதயத்திலும் இப்பிணைப்புக்களை உடைத்து பூரண சுதந்திரத்தை பெறுவதற்கான விடுதலை என்ற விதை விதைக்கப்பட்டே உள்ளது,பரமாத்தவிலிருந்து பிரிந்து வந்த ஜீவாத்மாக்கள் தாங்கள் மாற்றமில்லாத ஒரு பெருஞ் சக்தியை சுற்றி மாற்றமடைந்தவாறு உள்ளோம்,மாற்றமடையும் உடலுக்கு நிலைக்கும் தன்மை இல்லை,மாறாத ஆன்மாவுக்கு அழிவு இல்லை இந்த பிரபஞ்சம் முழுவதும் இவ்வாறே மாறாத ஒன்றை பற்றி மாற்றமடையும் செயல்முறையை நடந்தவாறு உள்ளது,

அழிவற்ற ஆன்மாவை எவராலும் அழிக்கமுடியாது,நீங்கள் அனைவரும் அழியாத ஆத்மாக்கள்,அழியப்போகும் உடம்பை நினைத்து கலங்க வேண்டியதில்லை,உனக்கு விதிக்கப்பட்ட கடமையை சரிவர செய்வதை விட மேலான சிறந்த தர்மம் ஒன்றில்லை,பலனை எதிர்பார்த்து கடமையை செய்வதற் மூலம் நாம் பாவங்களை பெற்று கொள்கின்றோம்,காரணம் இங்கே நன்மை கலவாத தீமையுமில்லை,தீமை கலவாத நன்மையுமில்லை,ஆத்மாக்களை தாங்கி நிற்கும் உடல்களே அழிகின்றன,ஒரே புத்தி,ஓரே செயல் கொண்டு கடமையை செய்,எவன் எதிலும் பற்றுஅற்றவனாக நன்மை வந்த பொழுதும் தீமை வந்த பொழுதும் கலங்காமல் இருக்கிறானோ அவனுடைய அறிவு நிலையானது,கோபத்தினால் மனக்குழப்பம் ஏற்படுகிறது,மனக்குழப்பத்தால் ஞாபகமறதி ஏற்படுகின்றது,ஞாபக மறதியால் புத்தி நாசமும் புத்தி நாசத்தால் எல்லாமும் ஏற்படுகின்றது.

எனவே விழிப்புணர்வு கொண்டு உன்னையும் உன்னை சுற்றியுள்ள ஒவ்வொரு அசைவுகளை அறிந்து அதற்கு ஏற்ப உனது செயலை வடிவமைப்பதன் மூலமே விடுதலையை பெற்று கொள்ளமுடியும்,நீ ஒரு செயல் செய்து அதற்கு விளைவுகள் உண்டு எனில் நீ அதற்கு அடிமை,உனக்கு விடுதலை இல்லை என்று பொருள்,நாம் நினைப்பவை செயல்களாக பரிணமிக்கின்றன.

பலன்களுடைய சிந்தைகளே பலன்களை நோக்கி செயல்களை செலுத்துகின்றன.ஒவ்வொரு சிந்தனைகளிலும் நமது விழிப்புணர்வை செலுத்தும் போது அவை விழிப்புணர்வுடன் கூடிய செயல்களாக பரிணமிக்கின்றது.விழிப்புணர்வு நிலையும் பெருகி கொள்வதுடன் நமது சிந்தைகள் செயல்களை காலம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை அறிவதே விழிப்புணர்வின் அடுத்தபடி,அதை அறிவதன் மூலம் நாம் விடுதலையின் அடுத்த படியை நோக்கி அடி எடுத்து வைக்கலாம்…

Sale!

Saree

Original price was: 206,00 €.Current price is: 158,00 €.
Sale!

Saree

Original price was: 206,00 €.Current price is: 152,00 €.
Sale!

Saree

Original price was: 197,00 €.Current price is: 148,00 €.
Sale!

Samudrika

Original price was: 620,00 €.Current price is: 465,00 €.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Posts

spot_img
spot_img
spot_img

Don't Miss

spot_img
spot_img
spot_img