Wednesday, March 18, 2026
No menu items!

பாரிஸ்: தமிழர் வேலை செய்யும் உணவக அசம்பாவிதம்! ஒருவர் பலி!

Paris restaurant incident news பாரீஸ் நகரில் உணவம் ஒன்றில் கார் ஒன்று வேகமாக மோதிய சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன், மூவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.

தீவிர தேடுதல் நடவடிக்கை

குறித்த சம்பவத்தை அடுத்து, அந்த வாகனத்தின் சாரதி தப்பி ஓடியதை அடுத்து, பொலிசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை துவங்கியுள்ளனர். பாரீஸ் நகரில் அமைந்துள்ள Le Ramus உணவகத்தின் மீதே தமது வாகனத்தை அந்த சாரதி செலுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தில் மேலும் மூவர் காயங்களுடன் தப்பியுள்ளனர். தகவலையடுத்து அவசர உதவிக் குழுவினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் குழு சம்பவயிடத்திற்கு விரைந்து வந்தனர்.

வாகன விபத்து குறித்து தற்போது விசாரணை துவக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி, பாதுகாப்பு கருதி வெடிகுண்டு நிபுணர்களும் சம்பவயிடத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். விபத்தை ஏற்படுத்திய அந்த வாகனத்தின் ஒரு பயணி மது மற்றும் போதை மருந்து உட்கொண்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், இச்சம்பவம் எதிர்பாராத விபத்தா அல்லது சாரதியின் திட்டமிட்ட நடவடிக்கையா என்பது குறித்து பொலிசார் இதுவரை உறுதி செய்யவில்லை. மட்டுமின்றி, இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்தில் அதிகரித்து வருவதாகவும், எச்சரிக்கை நடவடிக்கைகள் தேவை என்பது போன்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

பயணி ஒருவர் கைது

ஜூலை 26ம் திகதி பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் முன்னெடுக்கப்படுவதால், பிரான்ஸ் முழுவதும் தீவிர பாதுகாப்பு எச்சரிக்கையில் கொண்டுவரப்பட்டுள்ளது. மட்டுமின்றி, ஐ.எஸ் அமைப்பும் பாரீஸ் ஒலிம்பிக் போட்டிகள் தொடர்பில் மிரட்டல் விடுத்துள்ளது.

பயங்கரவாத அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

இதனிடையே, விபத்தை ஏற்படுத்திய சாரதி தப்பியுள்ள நிலையில், வாகனத்தில் இருந்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவயிடத்தில் பொலிசார் குவிக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

👆 பார்க்க அழுத்துங்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

More News

புல தமிழர்களின் கவனயீனம்! காசு பார்க்கும் கும்பல்!

யாழ் நகரை அண்டிய பகுதிகளில் பூட்டிய நிலையில் இருக்கும் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான காணிகள் அடாத்தாக அபகரித்து விற்பனை செய்யும் மோசடி கும்பல் ஒன்று நடமாடி...

பிரான்ஸ் தமிழ் பெற்றோர்! பிள்ளைகள் கவனம்!

இணைய உலகில் அதிக பிரபலமடைந்துள்ள TikTok பிளாட்ஃபாரம் மீண்டும் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது. சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் (mineurs) காட்டப்படும் publicités inappropriées TikTok, குறிப்பாக நிர்வாணத்தைக் குறிக்கும் விளம்பரங்கள்,...

கடன் வாங்கி பிரான்ஸ் வந்த தமிழ் இளைஞர்! பின்னர் நேர்ந்த கதி!

80 லட்சம் ரூபாய் கொடுத்து பிரான்ஸ் வந்தவரின் நிலமை.. நேற்று இரவு பிரான்ஸிலிருந்து நண்பன் ஒருவன் phone எடுத்தான்..கதைச்சு கணகாலம், கதைக்கிடையில் ஒரு கதையும் சொன்னான்..அவனுடைய...

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு!

பிரான்ஸில் ஈழ தமிழ் இளைஞருக்கு பரிசாக கிடைத்த சொகுசு மாடி குடியிருப்பு! பிரான்ஸில் பிறந்து வாழ்ந்து வரும் ஒரு தமிழ் இளைஞர்,இவர் பாரிஸ் மென்பொருள் பல்கலைகழகத்தில் படித்து...
- Advertisement -

More Articles Like This