2010-ல் MV சன் சீ கப்பலில் வந்த 492 ஈழத் தமிழர்களில் ஒரே பின்னணி, ஒரே போர் அனுபவம், ஒரே அச்சுறுத்தலைச் சொல்லி அகதி உரிமை கோரியவர்கள். ஆனால் கனடா அரசு அவர்களை ஒரே அளவுகோலில் நடத்தவில்லை.
சிலர் அகதி உரிமை பெற்று, நிரந்தர வதிவிடம், பின்னர் கனேடிய குடியுரிமை பெற்றனர். அவர்கள் இன்று இலங்கைக்கு விடுமுறைக்குச் சென்று, குடும்பத்துடன் சுற்றுலா சென்று, பாதுகாப்பாக கனடா திரும்புகின்றனர். இலங்கை “ஆபத்தானது” என்று சொல்லி குடியுரிமை பெற்ற அதே நபர்கள், இப்போது அங்கு விடுமுறைக்குப் போவது சட்டபூர்வமானது என்று கனடா அரசே ஏற்றுக்கொள்கிறது.
ஆனால் அதே கப்பலில் வந்த, அதே காரணங்களைச் சொன்ன மற்ற தமிழர்களுக்கு அகதி உரிமை மறுக்கப்பட்டது. 16 ஆண்டுகளாக அவர்கள் limbo நிலையில் தவிக்கின்றனர். deportation அச்சத்தில் வாழ்கின்றனர். சமீபத்தில் குகதீஸ்வரன் துரைசிங்கம் போன்றவர்களுக்கு ஏப்ரல் 2026-ல் நாடு கடத்தல் உத்தரவு வரும் நிலை உள்ளது. இலங்கையில் சிறை, சித்திரவதை, மரண அபாயம் இருப்பதாக அவர்கள் இன்னும் சொல்லிக்கொண்டிருக்கின்றனர்.
இது தெளிவான இரட்டைத்தரம். ஒரே கப்பல், ஒரே ஆண்டு, ஒரே போர் பின்னணி. ஆனால் சிலருக்கு கனடா “உங்கள் வாழ்க்கை பாதுகாப்பானது, இலங்கைக்கு போகலாம்” என்று குடியுரிமை கொடுத்துவிட்டு, மற்றவர்களுக்கு “இலங்கை இப்போது பாதுகாப்பானது, திரும்பிப் போங்கள்” என்று deportation செய்ய முயல்கிறது.
கனடா அரசின் நிலைப்பாடு என்ன? அகதி உரிமை அப்போதைய நிலவரத்தை அடிப்படையாகக் கொண்டது என்று சொல்கிறது. ஆனால் 16 ஆண்டுகளுக்குப் பிறகும் அதே நிலவரம் தொடர்ந்தால் என்ன செய்வது? இலங்கையில் மனித உரிமை அமைப்புகள் இன்னும் இராணுவ கண்காணிப்பு, அச்சுறுத்தல், சித்திரவதை அபாயம் இருப்பதாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போது, failed asylum seekers-ஐ மட்டும் ஏன் திருப்பி அனுப்ப முயற்சிக்கிறது?
இது கனேடிய அகதி முறைமையின் பெரிய பலவீனத்தை காட்டுகிறது. ஒரே வழக்கில் சிலருக்கு உரிமை, சிலருக்கு மறுப்பு – இது தனிப்பட்ட சாட்சியங்கள், IRB உறுப்பினர்களின் மனநிலை, அல்லது அரசியல் அழுத்தங்களால் நடக்கிறதா என்பது தெளிவாக இல்லை.
உண்மையில் , இது நியாயமற்றது. ஒரே பிரச்சினையை எதிர்கொண்ட அதே தமிழர்களுக்கு இரு விதமான நடத்தை இருக்கக்கூடாது. கனடா அரசு தன் அகதி கொள்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். MV சன் சீ வழக்கில் மீதமுள்ளவர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் ஒரு நியாயமான, ஒரே மாதிரியான தீர்வை வழங்க வேண்டும். “ஆபத்து இருந்தது” என்று சொல்லி குடியுரிமை கொடுத்தவர்களுக்கு இலங்கை பாதுகாப்பானது என்றால், அதே ஆபத்தைச் சொல்லும் மற்றவர்களுக்கும் அந்த உரிமையை வழங்க வேண்டும். அல்லது அனைவருக்கும் ஒரே அளவுகோல் இருக்க வேண்டும்.
இரட்டைத்தரம் என்பது நீதிக்கு எதிரானது. கனடா தன் பெயருக்கு ஏற்றவாறு மனித உரிமை அடிப்படையில் நடந்துகொள்ள வேண்டும்.



